வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, April 20, 2011

அவனாலா?


அன்னம் மறந்தேன் அவனாலா?
அன்னம் பிடிக்காமல் ஆனதாலா?

இடைமெலிந்து ஆனது பாதியா?
இல்லையிது காதல் வியாதியா?

கைவளை தனியே போனதா?
இல்லையிது பசலையால் வந்ததா?

உயிர்மூச்சில் உன் வாசமா?
உன் சுவாசத்தின் மீதமா?

உதட்டின் ஓரம் மச்சமா?
உன் முத்தத்தின் மிச்சமா?

கண்மூடி உனைகாண்பது கனவா?
காதல் செய்த நினைவா?

Monday, April 18, 2011

பயணம் தொடருது


இருக்கையில் அமர்ந்தாள்  
நீண்டபெருமூச்சு விட்டாள்
சன்னல் திறந்தாள்
எங்கோ வெறித்தாள்
தூறலை தொட்டாள் 
முந்தானைமுக்காடு இட்டாள்
நகம் கடித்தாள்
புத்தகம் புரட்டினாள்
புன்னகை பூத்தாள்
புருவம் சுருங்கி யோசித்தாள்
புத்தகம் நழுவ தூங்கினாள்
சொம்பல் முறித்து எழுந்தாள்
கைகள்தேய்த்து கண்ணில் ஒத்தினாள்
கண்கள்மூடி காத்து வாங்கினாள்
தலைமுடி காதுக்கு ஒதிக்கினாள்
முந்தானை சரி செய்தாள்
அவள் நிறுத்தத்தில் இறங்கினாள் 
ஒத்தையடிபாதையில் நடந்து மறைந்தாள் 
சில நாட்கள்.......
சில மாதம்.......
சில வருடம்......
ஒத்தையடிபாதை நிறுத்தம் வரும்போது 
நிற்காமல்வருது அவள் நினைப்பு
பயணம் தொடருது அதேவழி

Friday, April 1, 2011

நிகழா நிகழ்வா அவள் ?



தொகுப்பாளினின் தனித்தமிழ்
தாவணியில் தமிழ்ப்பெண்
ராமநாதபுரமாவட்டத்தில் மழை
சரியானநேரத்தில் ரயில்
நூறுசதம் ஓட்டுப்பதிவு
தமிழனுக்கு நல்லதலைவன்
கள்ளமில்லா மனிதன்
பள்ளமில்லா சாலை
ஆளுமையில்லா அப்பா
கேள்வியில்லா மனைவி
பொய்சொல்லா கணவன்
மனனமில்லா பாலர்கல்வி
நெடும்தொடரில்லா தமிழ்தொலைகாட்சி
வாரிசில்லா அரசியல்
ஊழலில்லா ஜனநாயகம்
லஞ்சமில்லா அரசுஅலுவலகம்
இலவசமில்லா தேர்தல்
விண்ணைத்தொடாத விலைவாசி
கடனில்லா விவசாயி
சோகமில்லா தனிஈழம்
மின்வெட்டில்லா தமிழகம்
குத்துபாட்டுல்லா விஜய்படம்
அரசியலில் ரஜினி
என வரவேமாட்டாயா
என்வாழ்வில் நீ ?