வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Tuesday, February 11, 2014

இவர்களும் நானும்

இவர்களும்  நானும்


இதுவரை காணாத கடவுளை
கண்டால் சில வரங்கள் கேட்பேன்

நினைக்கும் நேரத்தில் உங்களை
வந்தடையும் விண் வழி கேட்பேன்

கண்மூடி திறக்கும்முன் உங்கள்முன்
நிற்கும் நொடிவிமானம் கேட்பேன்

கூட்டத்தில் மற்றவரிடம் இருந்து
மறையும் தந்திரம் கேட்பேன்

சேர்ந்திருக்கும் நேரம் அப்படியே
உறையும் சூத்திரம் கேட்பேன்

விரும்பும் மட்டும் உங்களுடன்
விளையாடும் மந்திரம் கேட்பேன்

நாம் மட்டும் பேச
சொந்தத்தில் மொழி கேட்பேன்

உங்களை மட்டும் காண
மூன்றாம் விழி கேட்பேன்

வராத கடவுள் வருவாரா?
கேட்கும் வரங்கள் தருவாரா?

2 comments:

  1. அழகான... அருமையான... ஏங்க வைக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    படம் பிரமாதம்...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது உலவு ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete