ஞாபகப்பையில்
தியாகம் ஓடியாடி சேர்ப்பாள்.
நிரம்பி பை
நடுவீட்டில் வழியும் ஒர்நாள்.
வக்கில் நீதிபதி
அன்று அவள் தான் எல்லாம்.
மற்றவர்கள்
குற்றவாளி கூண்டில் வாய்மூடி.
தண்டனை வாசிப்பாள்
ஆனால் அமுல்படுத்தமாட்டாள்.
அணைவரும்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர்.
மறுபடியும்
தியாகம் தேடி ஓடி நிறைய சேர்ப்பாள்
ஞாபகப்பையில் அம்மா.
மற்றோர் நாளில்
தியாகம் நிரம்பி நடுவீட்டில் வழிய
அணைவரும்
எதுவும் செய்யாமல் காத்திருப்பர்
குற்றவாளியாக அன்றும்.
எங்கிருந்தாய் இதுவரை
ஏன் வந்தாய் என் முன்னே
என் இருப்பை தொலைத்தேன்
புதிதாய் பிறந்தேன்
உன் புன்னகையில்.
உலகின்
முதல் கெட்டவன்
கடைசி நல்லவன்
அதுபற்றி கவலையில்லை
உன் புன்னகைக்காக போரும்
செய்யத் தயார்
நீ எனதானால்.
அம்மா எனில்
வைராக்கியகாரி.
மகள் எனில்
கெட்டிக்காரி.
அக்கா எனில்
வீம்புக்காரி.
மனைவி எனில்
திமிருக்காரி.
பிடிவாதம் செயல் ஒன்றே
வெவ்வேறாய் அர்த்தம் கொள்ளுது
ஆண்மனம் !!!
வார்த்தை கிடைக்காமல்
................................
வரிகளுக்குள் இடம்
.........................
விட்டு நிரப்புகிறேன்
.........................
வாசிக்கும் உன்னை
..........................
வந்து அடையும் என்
..........................
வலி என்று.
தடித்த தேகம்
காய்த்த தோல்
கருத்த நிறம்
கண்டிய கைகள்
காய்த்த விரல்கள்
முறுக்கு மீசை
முரட்டு பார்வை
அன்பு பாசம்
விருப்பு வெறுப்பு
பக்தி பரவசம்
கோபம் தாபம்
எல்லா உணர்வையும்
ஆக்ரோசமாக மட்டும்தான்
காட்ட தெரியும்
கரிசல்காட்டு வெள்ளேந்திக்கு
மௌனமாய் ஓர் யுத்தம்
யுத்தத்தில் உன் சத்தம்
சத்தமில்லா உன் மௌனம்
மறுபடியும்
மௌனமாய் ஓர் யுத்தம்
... ... ... ... ... ...
யுத்தமோ? மௌனமோ?
நித்தம் வேண்டும் நீ.
ஒளி மலரா சேர்க்கை
செயற்கையா மலர்ந்த விவாதம்
சாட்சி வைக்கா சமாதானம்
சாட்சி வைத்து சண்டை
சண்டை சொல்ல சாட்சி
சாட்சி சொன்ன பொய்
சாட்சி சொல்லா உண்மை
உண்மையில் உள்ள பொய்
பொய்யில் உள்ள உண்மை
உனக்கும் எனக்கும் தெரியும்
வாதாடிய வக்கில் பாவம்.
விதை உனது
விருச்சம் எனது
***
வேர் உனது
விழுது எனது
***
உழைப்பு உனது
உயர்வு எனது
***
கனவு உனது
நிகழ்வு எனது
***
இலக்கு உனது
வெற்றி எனது
***
பாதை உனது
பயணம் எனது
***
எங்கிருந்தாய் இதுவரை
ஏன் வந்தாய் என் முன்னே
என் இருப்பை தொலைத்தேன்
புதிதாய் பிறந்தேன்
உன் புன்னகையில்.
உலகின்
முதல் கெட்டவன்
கடைசி நல்லவன்
அதுபற்றி கவலையில்லை
உன் புன்னகைக்காக போரும்
செய்யத் தயார்
நீ எனதானால்.
உயிருக்கு உயிருராய்
காதலித்தார்கள்.
நண்பர்கள் சூழப் பதிவு
செய்து கொண்டார்கள்.
ஒரே கலரில் சட்டை
போட்டார்கள்.
ஒருவருக்கு ஒருவர்
விட்டுக்கொடுத்தார்கள்.
அன்பான அடைமொழியில்
விளித்து கொண்டார்கள்.
ஆண் நண்பர்கள் அவள்போல்
மனைவிக்கும்
பெண் நண்பிகள் அவன்போல்
கணவனுக்கும் பிராத்தித்தார்கள்.
ஒரு நல்ல நாளில் நண்பர்கள்
தொடர்பு எல்லைக்கு
வெளியே போனார்கள்.
எந்த சமுகவலைதளங்களும்
எங்களுக்கு உதவவில்லை.
எங்கு தேடியும் இன்றுவரை
அவர்கள் கிடைக்கவில்லை.
எங்கள் நண்பர்களை பொறுத்தவரை
அவர்கள் மட்டுமே காதலர்கள்.
எங்கோ குடும்பமாய் வாழ்கிறார்கள்.
விக்னேஷ்
சிலநாட்கள் இன்னும்
செய்திகளில் தென்படப்போகும்
பெயர்.
விவாதங்களில் அடிபடப்போகும்
பெயர்.
வலை முகப்புகளில் பகிரப்போகும்
பெயர்.
அன்று மொழியின் பெயரால்
பத்துக்கு மேல்
நேற்று இனத்தின் பெயரால்
நூற்றுக்கு மேல்
இன்று ஆறின் பெயரால்
நீ.
விதைப்பது நீங்கள்
அறுவடை செய்வது என்னவோ
அரசியல் கட்சிகள்.
தமிழா....
எங்கே கற்றுக்கொண்டாய்?
நாளை எதன் பெயரால்
நிகழ்த்த போகிறாய்?
வேண்டாம் இனி எதன் பெயராலும்
தற்கொலை.
அவரவர் தனித்தன்மை ஏது என்றோம்? இனம் என்றாய் மொழி என்றாய் சிறிய சிறிய கோடு போட்டாய் ஏன் என்றோம்? ஆள வசதி என்றாய் கோடுகளை சேர்க்க பெரியகோடு போட்டாய் எதுக்கு என்றோம்? வேற்றுமையில் ஒற்றுமை அதுக்கு என்றாய் நானும் அவனும் நம்பினோம். ஆள வந்தாய் அரசியல் செய்தாய் இனம் வேறுபாடு கற்பித்தாய் மொழி பிரிவினை வளர்த்தாய் கோடு அவனவன் எல்லையாக்கினாய் தனித்தன்மை வேற்றுமை ஆனது சிறிய கோடுகள் பெரிய கோடானது அரசியல் ஊற்றி வளர்த்தாய் நதி பிரிந்தது நீர் மடைமாறியது நதி மடலானது நஞ்சை தாரானது அடுப்பு அணைந்தது வயிரு எரிந்தது மானமுள்ளவன் இறந்தான் ரோசமுள்ளவன் எதிர்த்தான் எதிர்த்தவனை அடித்தான் அடிபட்டவனும் அடித்தான் மனிதம் மாண்டது போர் மூண்டது.
நித்தம் சந்திக்கும் காபிஷாப் அதே மூலையோர மேசை எதிரெதிராய் அவனும் அவளும் இரண்டு பக்கமும் மௌனம் பரிசுகள் இடம்மாறின உணர்வுகளற்று கடிதங்கள் ஒன்றொன்றாய் கிழித்தான் வாழ்த்துஅட்டை பார்க்காமல் அழித்தாள் கைகுலுக்காமல் விடைபெற்று வீதியில் இறங்கி நடந்தனர். எதிர்பாராத மழை எங்கிருந்தோவர இருவர் மனதிலும் சந்திப்புகளின் வாசனை.
புழுக்கம் தாளவில்லை தாகம் தீரவில்லை எங்கும் கானல்நீர் மூச்சு முட்டுகிறது விழி பிதுங்கிறது நரிகள் நிறைந்த காடு எங்கும் கார்ப்பேரெட் காடு திக்கு தெரியவில்லை திரும்ப வழி புரியவில்லை
விதை நெல் - நெல் மூன்று தலையில் சும்மாடு அதுக்குமேல கூழ்ச்சட்டி இடுப்பில் நார்ப்பெட்டி நிறைய வெதைத் தானியம் மறுகையில் கன்னுக்குட்டியும் பிடித்துக் கொண்டு புளிமூட்ட மாமா பின்னாடி கொஞ்சத்தூரத்தில் நடந்து வந்தார் செவனம்மா அத்தை.
தலையில் கூழ்ச்சட்டி எந்த பிடிமானமும் இல்லாமல் செவனம்மா அத்தை நடந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
நான் எழுந்து என் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு எங்க தோட்டத்தை நோக்கி நடந்தேன். என்னைப்பார்த்த அத்தை பாதையில் இருந்து சிறிது விலகி எனக்கு வழி விட்டு நடந்தாங்க.
"குதுரவள்ளி வெதைக்க போறீங்களா அத்த" என்றேன்.
"ஆமாம்.... மருமகனே..." மருமகனே என்னு சொன்னது அவங்களுக்கே கேட்டு இருக்காது அவ்வளவு மெதுவா தலையக்கூட நிமிராமல் கன்னுகுட்டியை பார்த்துக்கொண்டே பதில் சொன்னாங்க. பெறந்த குழந்த கூட அது மருமகன் முறை என்றால் எங்க ஊர் பொம்பளைங்க கொடுக்கும் மரியாதை எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும்.
தம்பியை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரெண்டு ஆட்டுக்குட்டிய விரட்டிக்கிட்டு "ஆத்தா... மெதுவா போ..." என்று கத்திக்கொண்டே வேகமாக நடந்து வந்தா ஒன்பது வயது மதிக்கத்தக்க அத்தமக.
நான் அவளை வழி மறித்து நின்றேன்.
"மாமா... வழிவிடுங்க நான் போகனும்" என்றாள்.
"உன் பேரு என்னன்னு சொல்லு... நான் வழி விடுறேன்" என்றேன்.
"செங்கனி" என்றாள்.
"நல்ல பேரு... உன் பேருக்கு என்ன அர்த்தம் ?" என்று வம்புக்கு இழத்தேன்.
"செம்மை கூட்டல் கனி" என்றாள்.
அவள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரிமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணர்வுகளை காட்டிக்கொள்ளாமல் " என்ன படிக்குற..." என்றேன்.
"பொம்பளப்புள்ள படிச்சு என்ன பண்ணப்போகுது... அதேன் எதுக்குன்னு நிறுத்திட்டோம்..." என்றார் அத்தை.
"அப்படி எல்லாம் சொல்லாதிங்க அத்த... " என்றேன் வருத்தமாக.
"கூடமாட இருந்து வீட்டு வேல தோட்ட வேல கத்துகிட்டா போற இடத்துல ஒத்தாசைய இருப்பா அதான்... தம்பி..." என்று இழத்தார் அத்தை.
"பார்த்தா நல்லா படிக்குற பொண்ணு மாதரி இருக்கா... வீட்டுல பொண்ணுங்க தான் படிக்கனும்... அப்பதான் அவங்க பிள்ளைங்க படிக்க உதவியா இருக்கும்" என்றேன். அப்போது ஏனோ குடும்பவிளக்கு பாரதிதாசன் என் நினைவில் வந்து போனார்.
"ஆமாப்பா ஓட்டத்துல கூட மொத இடத்துல வந்து இருக்கா... அவங்க வகுப்புலயே இரண்டாவதாம்" அத்த கண்ணில் ஒரு சிறிய பெருமை வந்து போனதை கவனித்தேன்.
"பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க அத்த..." என்றேன் சிறிது கெஞ்சலாக.
"எங்க அப்பா கூட பள்ளிக்கூடம் தான் போகச் சொல்லுராங்க மாமா... ஆனா..." என்று தம்பியை இறக்கிவிட்டு அம்மாவை ஏறயிறங்க பார்த்தாள் செங்கனி.
"நான் அம்மா, அப்பாகிட்ட சொல்லிக்கிறேன். நீ பள்ளிக்கூடம் போறயா? " என்றேன்.
"சரிங்க மாமா " என்று ஆட்டுக்குட்டியை பிடிக்க துள்ளிகுதித்து ஓடினாள் செங்கனி.
செங்கனியை பார்த்தபோது என் தேன்மொழி தான் ஞாபகத்துல வந்தா? மனது பாரமானது... நல்லா மூச்சு இழந்துவிட்டேன் மனபாரம் குறையும் என்று. ஆனால் பாரம் கூடவே செய்தது.
யார் அந்த தேன்மொழி? ஏன் இவன் கவலையானான் தேன்மொழியை நினைத்து? தேன்மொழிக்கு என்ன ஆயிற்று?
நிலவு இல்லாத வானம் இருட்டு தின்னும் இரவு மழைவிட்டும் தூறும் மரம் அணைய துடிக்கும் தெருவிளக்கு எமனுக்காக காத்திருக்கும் கிழவி தூரத்தில் குரைக்கும் நாய் தனியே கத்தும் தவளை உறக்கம் இல்லா புழுக்கத்தில் பேரிளம்பெண்.