வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, September 29, 2016

அணைவரும் குற்றவாளி

ஞாபகப்பையில்
தியாகம் ஓடியாடி சேர்ப்பாள்.
நிரம்பி பை
நடுவீட்டில் வழியும் ஒர்நாள்.
வக்கில் நீதிபதி
அன்று அவள் தான் எல்லாம்.
மற்றவர்கள்
குற்றவாளி கூண்டில் வாய்மூடி.
தண்டனை வாசிப்பாள்
ஆனால் அமுல்படுத்தமாட்டாள்.
அணைவரும்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர்.
மறுபடியும்
தியாகம் தேடி ஓடி நிறைய சேர்ப்பாள்
ஞாபகப்பையில் அம்மா.
மற்றோர் நாளில்
தியாகம் நிரம்பி நடுவீட்டில் வழிய
அணைவரும்
எதுவும் செய்யாமல் காத்திருப்பர்
குற்றவாளியாக அன்றும்.

#என்அடிச்சுவடு

No comments:

Post a Comment