வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, February 14, 2011

உயிர் வாழ வழியிருக்கா ?



ஓடி பிடுச்சு வெளையாடி
விழுந்து உராய்ந்த புண்ணுக்கு
எச்சிமண்ண உனக்கு தடவுனப்ப
கொஞ்சம் மனசும் சேர்ந்து வந்திருச்சு

ஊர்க்கருப்புக்கு யாரோ ஒடச்ச
செதறு தேங்காசில்லுல ஒட்டுனமண்
ஊதி உனக்கு கொடுத்தப்ப
கொஞ்சம் உசிரு ஒட்டிகிட்டு வந்திருச்சு

கஞ்சி காச்சி வெளையாண்ட
கதவு இல்லாத வீட்டுக்குள்ள
ஒன் காலடித்தடம் பதிச்சப்ப
கொஞ்சம் உறவும் கூட வந்திருச்சு

சாமி ஊர்சுத்தி வந்தப்ப
மாவிளக்கு வெளுச்சத்துல மங்கலா
ஒன் மொகம் பாத்தப்ப
கொஞ்சம் கிறுக்கும் பிடுச்சு போச்சு

பச்சஓல இடுக்கு வழி
ஒன் கண்ண பாத்தப்ப
மிச்சம் மிதம் இருந்த
கொஞ்சம் நஞ்சம் உசிரும் போயிருச்சு

உயிர் வாழ வழியிருக்கா ?
நீ வந்துசேர மனமிருக்கா ?
வெறும் கூடுதான் இங்கிருக்கு
கொஞ்சம் கொஞ்சமா போனதெல்லாம்
கொண்டு வந்து சேப்பியா ?

Friday, June 4, 2010

த்ரிஷாவும் நானும்










நான் பிறந்தபோது
அழுதேனோ தெரியாது 
நீ பிறந்தபோது 
அழுதேன் 

உயிரை பிரிந்ததாய்
உணர்ந்தேன் 
உன்னை விட்டு 
ஊருக்கு போகையில் 

நான்  வேண்டியது 
கிடைத்ததில்லை 
நீ வேண்டியது 
கிடைத்திட விளைகிறேன் 

என் நாள் 
உன் குரல் கேட்டு 
விடியவும் முடியவும் 
செய்யும்

விளையாட்டாய் 
நீ உன்மடியில் 
எனைசாய்த்தபோது
என் தாய்மடி உணர்ந்தேன் 

என் எல்லா 
திசையிலும் உன்குரல்
என் எல்லா 
பக்கத்திலும் உன்முகம்


Thursday, June 3, 2010

மனைவி அவள்

மனைவி அவள்
எல்லோரையும் புரிந்துகொள்ள
அவளை புரிய
யாரும்மில்லை

மனைவி அவள்
எல்லோருக்கும் சமைத்து
அவள் சாப்பிட்டாளா
யாருக்கும் கவலையில்லை

மனைவி அவள்
எல்லோருக்கும் காதுகொடுத்து
அவள் பேச்சுக்கேக்க
யாரும்மில்லை

மனைவி அவள்
குழந்தையின் பாடம்படித்து
அவள் வேலை
துறப்பாள்



Friday, May 7, 2010

காலப்போக்கில்

உற்றார் மரணம்
மறந்துபோனேன்
காலப்போக்கில்...

என் மரணம்
உற்றார் மறப்பர்
காலப்போக்கில்...

சுகப்பிரசவம்


தாய் சேய்
நலம்
கத்தி ரத்தத்துடன்
சுகப்பிரசவம்

Thursday, May 6, 2010

தமிழ் தலைவன்

பொதுவுடைமை
பேசி
பொது சொத்துடைப்பர்

தமிழ் உயிர்
என்று
தமிழன் மடியதுனையாவர்

வாரிசு அரசியல்
மறுத்து
வாரிசு அறிக்கைவிடுக்கும்

தொண்டன்
விலை போகக்கூடாது
என்று
ஓட்டுக்கு காசுகொடுப்பர்

பெண்ணுரிமை
பேசி
33 க்கு முட்டுக்கட்டையிடுவர்

கள்ளக்கலவி
கொண்டு
காதல் எதிர்ப்பர்

சாதியியம்
மறுத்து
தனிஒதிக்கீடு கேட்பர்

காவியுடன்
கூடி
கடவுள் மறுப்பர்

நாற்காலியாசை
இல்லையென
சக்கரநாற்காலியில்
இருந்து பதில் அளிப்பர்





Wednesday, May 5, 2010

ஏனோ இன்று...

பணத்திற்காக
ஏங்கிய மனம்
பழசுக்காக ஏங்கியது
அம்மாவின் அருகாமை
அப்பாவின் கண்டிப்பு
நண்பனின் அரட்டை
அற்ற அமெரிக்கா
அர்த்தமற்றதானது
ஏனோ இன்று...

Thursday, April 22, 2010

காதல் விடுதூது













சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...

கரைந்துதான்
போகிறேன்
உன் கண்ணில் ...

தொலைந்துதான்
போகிறேன்
உன் கன்னக்குழியில் ...

கலைந்துதன்
போகிறேன்
உன் கார்குழலில் ...

ஆடித்தான்
போகிறேன்
பின்னழகில் ...

வளைக்கதான்
போகிறேன்
உன்னிடையை ...

அணைக்கத்தான்
போகிறேன்
முன்னழகை ...

கூடத்தான்
போகிறேன்
உன்னுடனே ...

சொல்லத்தான்
போகிறேன்
உன் நினைவை ...






Wednesday, April 21, 2010

முன்னால் காதலன்

அவன்
தாடியுடன்

நான்
தாலியுடன் ...

அவன்
என் காதலுடன்
நான்
என் கணவனுடன் ...

அவன்
அவனாகயில்லை
நான்
இவனானதால் ...

Monday, April 19, 2010

காதல் மனைவி

மவுனமே பதிலனாய்
காதலில்
கேள்வி மட்டுமே
கேட்கிறாய்
மனைவியாக ...

எப்போதும் சிரிப்பாய்
காதலில்
எப்போதாவது தான்
சிரிக்கிறாய்
மனைவியாக ...

Sunday, April 18, 2010

கடன் அட்டை

நண்பன்
கைவிட்டாலும்
நான்
கைகொடுப்பேன் ...

மாசக்கடைசியில்
மானம்
காப்பேன் ...

கடனுக்கு
சலுகையளித்து
சந்தோசபடுத்துவேன்

என்னை வைத்து
எடை போடுவார்
உன்னை ...

ஆண்டியும்
அரசன்
என்னால் .....

Silver
Gold
Platinum
என்னை வைத்து
உன்னை தரம்
பிரிப்பர் ....

Friday, April 16, 2010

மண்தின்ற அம்மா


பிள்ளைவரம் வேண்டி
மண்சோறு தின்றவளை
மண் தின்றது
பிள்ளைக்கு வேண்டாததால்.

Wednesday, April 14, 2010

வேண்டி தொலைத்தது

கல்வி வேண்டி
இளமை
தொலைந்தது ...

காதல் வேண்டி
சுயம்
தொலைந்தது ...

வேலை வேண்டி
கனவு
தொலைந்தது ...

பதவி வேண்டி
நட்பு
தொலைந்தது ...

இல்லறம் வேண்டி
இன்பம்
தொலைந்தது ...

கலவி வேண்டி
தூக்கம்
தொலைந்தது ...

சமுகமரியாதை வேண்டி
சுற்றம்
தொலைந்தது ...

வேண்டியதெல்லாம்
கிடைத்தது
வெறுமையில் ...


Tuesday, April 13, 2010

பேனா

எண்ணத்தின்
வண்ணம்
நீ ...

மனிதனின்
மனசாட்சி
நீ ...

மொழி பேதம்
பார்பதில்லை
நீ ...

காகித உடலின்
உயிர்
நீ ...

ஊமையின்
மொழி
நீ ..

Monday, April 12, 2010

சொந்தமண்










உண்ண
உணவளித்தாய்
தாயாக ...

உடுக்க
உடையளித்தாய்
தந்தையாக ...

வீழ்ந்தபோது
தாங்கினாய்
நண்பனாக ...

முதல் காதல்
முதல் முத்தம்
முதல் கலவி
முதல் தோல்வி
மவுனசாட்சியாய் ...

என் வாழ்வின்
எல்லாமான உனைவிட்டு
எங்கோ போனேன்
என் வாழ்க்கைதேடி ...

Sunday, April 11, 2010

பசலை

கண்ணா
விடைபெற்றுப்போன
உன்னை வீதியில்
தேடுகிறேன்...

அன்பே
நீ அவிழ்த்த
அழக்குச்சட்டையை
உடுத்திக்கொள்கிறேன்...

காதலே
நீ இருந்த
இடத்தில் நின்று
நகர்கிறேன்...

ஆருயிரே
நீ விட்டு
சென்றதை
தொட்டுப்பார்கிறேன்...

Saturday, April 10, 2010

வாசனை

என் எல்லா
சுவாசத்திலும்
என் மண்ணின்
வாசனை ...

என் எல்லா
உணவிலும்
என் அம்மாவின்
வாசனை ...

என் எல்லா
உறவிலும்
என் அப்பாவின்
வாசனை ...

எல்லா
குழந்தையிடத்தும்
என் மகளின்
வாசனை ...

Friday, April 9, 2010

காதல் கடவுள்

காதலும்
கடவுள்போல்
முழுசாய் புரிந்தோர்
எவருமில்லை ....

காதலும்
கடவுள்போல்
எதிர்ப்பு ஆதரவு
எப்போதுமுண்டு ....

காதலும்
கடவுள்போல்
உணரத்தான்
முடியம் ...

காதலும்
கடவுள்போல்
இதற்குமுன்
எல்லோரும் சமம் ..


காதலும்
கடவுள்போல்
அடைவது எளிதில்லை ...
காதலும்
கடவுள்போல்
அடைதோர் சிலரே ....


காதலும்
கடவுள்போல்
கல்லானதுமுண்டு ...


காதலும்
கடவுள்போல்
இல்லவே இல்லை
என்பர் சிலர் ...
காதலும்
கடவுள்போல்
ஆக்கவும்
அழிக்கவும்
செய்யும் .....

Thursday, April 8, 2010

முதல்

முதல் காதல்
குளக்கல்லாய்
கரைவதில்லை ...

முதல் முத்தம்
உதட்டிரமாய்
உலரவில்லை ...

முதல் கலவி
மனவடுவாய்
மறையவில்லை ...

முதல் தோல்வி
குடவிளக்காய்
அணையவில்லை ....

Tuesday, April 6, 2010

அறை நண்பன்









கண்ணாடியில்
என் முகம்
பார்ப்பேன் ...
உன் முகத்தில்
என் மனம்
பார்ப்பேன் ...













கோவில்
குடி
கூத்து
பிரிந்ததில்லை
இருவரும் ...

ஆயிரம் கேள்வி
அன்று ஓர்நாள்
நீ
என்னுடன்
வராதபோது ....

நான்
பசித்திருப்பேன்
நீ
சமைத்திருப்பாய் ...

கோடிட்டு
பழகியதில்லை
ஆனால்
எல்லை தாண்டியதில்லை
இருவரும் ...















நிறை பாராடினோமா ?
நினைவில்லை
குறை கூறிகொண்டதில்லை
இருவரும் ...

உதவியாக இருந்தோமா ?
நினைவில்லை
உறுத்தலாக இருந்ததில்லை
இருவரும் ....

முடிவில்
பார்த்துக்கொள்வோமா ?
தெரியாது
ஆனால் நிச்சயம்
நினைத்துக்கொள்வோம் .