கண்ணாடியில்
என் முகம்
பார்ப்பேன் ...
உன் முகத்தில்
என் மனம்
பார்ப்பேன் ...

கோவில்
குடி
கூத்து
பிரிந்ததில்லை
இருவரும் ...
ஆயிரம் கேள்வி
அன்று ஓர்நாள்
நீ
என்னுடன்
வராதபோது ....
நான்
பசித்திருப்பேன்
நீ
சமைத்திருப்பாய் ...
கோடிட்டு
பழகியதில்லை
ஆனால்
எல்லை தாண்டியதில்லை
இருவரும் ...
நிறை பாராடினோமா ?
நினைவில்லை
குறை கூறிகொண்டதில்லை
இருவரும் ...
உதவியாக இருந்தோமா ?
நினைவில்லை
உறுத்தலாக இருந்ததில்லை
இருவரும் ....
முடிவில்
பார்த்துக்கொள்வோமா ?
தெரியாது
ஆனால் நிச்சயம்
நினைத்துக்கொள்வோம் .