வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Sunday, March 6, 2016

குற்றப்பரம்பரை ஒரு பார்வை

குற்றப்பரம்பரையில் இருந்து முழுதும் மீழாதா பயணத்தின் மிச்சம். 
ஆம்... அதன் பாதிப்பில் இருந்து வெளிவராமல் ஒரு பதிவு.

வேல ராமமூர்த்தியை மதயானைக்குட்டம் பிரஸ் மீட் யு ட்யூப்-ல்  பார்த்தேன். அங்கு குற்றப்பரம்பரை குறித்த கேள்வி வந்தது. படிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. நான் அமெரிக்காவில் இருந்ததால் டிஜிட்டல் வேர்சன் கிடைக்கவில்லை. 

நான் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மட்டுமே படித்திருக்கிறேன். படிப்பது குறைந்து விட்டது காரணம் வேலைப்பளு என்று நினைத்துக்கொண்டேன். அது உண்மையில்லை. 

விடுமுறைக்கு ஊருக்கு போனபோது வேல ராமமூர்த்தி அய்யாவின் பட்டது யானை, குற்றப்பரம்பரை தேடித்தேடி வாங்கினேன். பட்டத்துயானை விமானத்திலே படிக்க ஆரம்பித்து விட்டேன்.

ரனசிங்கம் மாயழகி முழுவதும் என்னை ஈர்த்துக்கொண்டனர். உண்மையில் துரைசிங்கம் திரும்பி வருவான் நம்ப ஆரம்பித்துவிட்டேன். 

ஒரு நாள் இடைவெளிவிட்டு குற்றப்பரம்பரை ஆரம்பித்தேன். நானும் வெய்யன்னவின் கூட்டதில் ஒருவனாகிப்போனேன். என் கிராமம் மேற்கு தொடர்ச்சி அருகில் உள்ள கடைசி ஊர். கதையில் வரும் இடங்கள் எங்க ஊரையும் என் மக்களை கண்முன் கொண்டு வந்தது.

கூழனி கிழவி எங்க அப்பத்தாவை ஞாபகப் படுத்தின்னால்.
எங்க ஊர் கம்மாயும் ஊரனியும் கண்முன் வந்து போனது.
நரிவேலும் வையாபுரியும் என் ஊரின் மக்களாக தெரிந்தார்கள்.

அன்னமயிலை காதலித்தேன். சிட்டு என் பள்ளிபருவத்து சிட்டுகளை நினைவு படுத்தியது.

பள்ளத்தாக்கு ஏனோ சம்மந்தமே இல்லாமல் grand canyon (http://grandcanyon.com/) என் நினைவில் வந்து போனது. அது வேல அய்யாவின் வெற்றியாகவே கருதுகிறேன்.

கெடவெட்டு, கறிச்சோறு, பட்டியகல்லு, ஒலவுகட்டி எல்லாம் ஒத்தயடி பதை புழுதியாக என்னோடு ஒட்டிக்கொண்டது. சிட்டுபோல் ஊரனியில் குளித்தாலும் போகவில்லை. அது புழுதி இல்லை என் ரத்தம் என்று தெரிந்தது.

என் மண்ணை விட்டு வெளியே வந்த சேதுவாக புழுங்கிக் கொண்டிருக்கிறேன். 

தென்மாவட்டத்தில் உள்ள எல்லோரும் படிக்கவேண்டிய பாடமாக பார்க்கிறேன்.

குற்றப்பரம்பரை திரையில் காண காத்திருக்கிறேன். 

வேலா அய்யாவின்  குருதி ஆட்டம் புத்தகம் முடித்து வெளியட காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment