வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, August 27, 2010

வண்டிக்காரன் (பாகம் 1)








"வண்டிக்காரன் கேஸ் கட்டு எடுத்துட்டு வாங்க ஏட்டு" புதுசா வந்த இன்ஸ்பெக்டர்.

"அய்யா...அந்த கேஸ்ச குளோஸ் பண்ணி இருபது வருசத்துக்கு மேல ஆச்சு... இப்பபோய்..." என்று இழுத்தார் ஏட்டு.

"தெரியும்...போயி எடுத்துட்டு வாங்க..."

கேஸ் கட்டு இருக்கும் அறையில் தேடி கண்டுபிடித்து வந்து கொடுத்தார் ஏட்டு.  இருபதுக்கு மேற்பட்ட வழுக்குகள் அவன் மேல் பதிவாகிருந்தது. கோழி திருடினது... படப்புல தீவச்சது... சாராயம் காச்சுனது... வித்தது... அடுத்தவன் பொண்டாட்டிகூட தொடுப்பு... என்று  சகலவிதமான வழக்கும் அவன் மேல் பதிவாகிருந்தது.  

"ஏட்டு... எவ்வளவு நாளா இந்த ஸ்டேசன்ல இருகீங்க... இந்த கேஸ் பத்தி ஏதாவது தெரியுமா ?"

"நான் கொஞ்சநாளாத்தான் இருக்கேன்... ஆனா இந்த கேஸ் பத்தி ஊர்லே எல்லாரும் பேசிகிட்டுத்தான் இருக்காங்க"

"அப்படி என்னதான் சொல்றங்க இந்த கேஸ் பத்தி?"

"வண்டிக்காரன் ரெம்ப மோசமானவன்... அவன் செத்தது ஊருக்கே புண்ணியமுன்னு சொல்றங்க..."

"அவன யாரு கொன்னாங்கனு யாருக்காவது தெரியுமா ?"

"அவன மலையிலா கண்டம் துண்டமா வெட்டி ஒரு ஓலப்பாயில காட்டி போட்டிருக்காங்க... ஒரு வாரம் கழிச்சுதான் மலையில ஆடு மேக்கிரவன் பாத்து சொல்லி பொணத்த அடையாளம் கண்டு பிடுச்சுருக்காக... அதுல கூட அவன் தலையை கொண்டு போயி தனியா எரிச்சு கம்மாயில கரச்சுடாங்க...அதனால இத காணாப்பொனம்முனு நம்ம டிப்பார்ட்மண்டுளையும் கேஸ்ச குளோஸ் பண்ணிட்டாங்க"

"இந்த கேஸ் பத்தி தெருஞ்சவங்க யாரவது இப்ப இந்த ஊருல இருங்காங்களா ?"

"சார்... வண்டிக்காரன் செத்தவுடன் அவன் பொண்டாட்டி கொளந்தையக் கூட்டிக்கிட்டு பொறந்த ஊருக்கே போயிட்டாங்க... அவங்களாப் பாத்தி எந்த விவரமும் இல்ல... ஆனா அவனப்பத்தி தெருஞ்ச அவனோடு பழகுனவங்க நாலஞ்சு பேரு இப்ப உயிரோடு இருக்காங்க"

"நான் அவங்களா பார்க்கணும் கூட்டிட்டு போகமுடியுமா?" என்று மப்டியில் கிளம்பினார் புதிய இன்ஸ்பெக்டர் யாருக்கும் போலீஸ் என்று தெரிய வேண்டாம் என்று.

"சார் நம்ம இப்ப பாக்கபோறது வண்டிக்காரனோட தொடுப்பு... பேரு மேகல" என்று ஒரு எழுபது என்பது வயது மதிக்கதக்க மூதாட்டியிடம் கூட்டிசென்றார் ஏட்டு.

"யாத்தா... வண்டிக்காரனப்பத்தி உங்களுக்கு தெருஞ்சத சொல்லுங்க... இவருக்கு  அவரப்பத்தி தெரியணுமாம்" ஏட்டு.

"அவரு மகராசன்... எல்லா விசயத்திலயும் நல்ல கெட்டிக்காறாரு..." பெருமூச்சு விட்ட கெழவி தொடர்ந்தாள்.  

"அவரு நல்ல பலசாலி... அவரே ஒத்தைக்கு ஒத்த சந்திக்க முடியாத யாரோ ஒரு பொட்டப்பைய  அவரு போதையில இருக்கப்ப கொன்னுட்டான்... அவனுக்கு நல்ல சாவே வராது"  வண்டிக்காரன் நினைவில் தரையைத் தடவினாள் கெழவி. 

ஏட்டு இன்ஸ்பெட்டரும் அங்கிருந்து நகர்ந்தனர். சார் உங்கள நான் வேணுமுன்னா வண்டிக்காரனோட எடுபுடி பேட்ரி கிட்ட கூட்டிட்டு போறேன் பேசிப்பாக்கலாம் ஏதாவது விஷயம் கிடைக்கும்.

"என்னய்யா பேரு இது பேட்ரி... டார்ச்சு லைட்டுன்னு..."

"சார் இவன் வண்டிக்காரன் சாராயம் காச்சுரதுக்கு அதுல கலக்க பழய பெட்ரி எல்லாம் பொறிக்கி மருந்து உண்டாக்குவானாம் அதான் இந்த பேரு. இந்த ஊர்ல பாதி பேருக்கு அவங்க சொந்த பேரே மறந்துபோச்சு. எல்லாரையும் அவங்க பட்ட பேரு வச்சுதான் கூப்பிடுறாங்க... இப்ப பாருங்க இந்த வண்டிக்காரனோட உண்மையான பேரு யாருக்கும் தெரியால" என்ற ஏட்டு இன்ஸ்பெக்டெரை பேட்ரிகிட்ட கூட்டிச்சென்றார்.

"ராஜா மாதரி இருந்தேன்... கையில எந்நேரமும் காசு இருக்கும்... எங்கள பாத்த எல்லாரும் பயப்புடுவாணுக...ஊர்ல ஒரு கெத்து இருந்துச்சு... வண்டிக்காரண்ணன் செத்தபோரவு ஒரு நாய் கூட மதிக்குறது இல்ல... அட போங்க சார்... அதப்பேசி இப்ப என்ன புண்ணியம்..."  என்று இடத்தை காலி செஞ்சான் பேட்ரி.

"சார் அப்ப நான் வீட்டுக்கு போயி சாப்புட்டுட்டு வரேன் நீங்க ஸ்டேசனுக்கு போங்க"

"வேற யாருக்காவது இந்த கேஸ் பத்தி தெருஞ்சா கேட்டுபாருங்க" வண்டியை கிளப்பினார் இன்ஸ்பெக்டர்.

வண்டிக்காரன் ஞாபகத்திலே வண்டியை ஓட்டிய இன்ஸ்பெக்டர் ஒரு பெருசு மீது மோதி விழுந்தார். ரெண்டு பேருக்கும் பெருசா காயம் இல்ல ஆனாலும் டாஸ்மா சரக்க உள்ள தள்ளியிருந்த பெருசு தான் கீழே விழுந்ததில் மயங்கியிருந்தார்.

பெருசுக்கு மயக்கம் தெளிந்ததா? வண்டிக்காரனை யார் கொலை செய்தது? வேறு எதாவது துப்பு கிடைத்ததா? அடுத்த பதிவில்...
   

Wednesday, August 25, 2010

இந்தியனும் இந்தியாவும்

இதபத்தி எழுத ஒன்னும் இல்ல....கட்டாயம் பாருங்கா....இந்தியனும் இந்தியாவும் வருங்காலம் புரியும்.






http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html

Sunday, August 22, 2010

கதை உருவான கதை

இப்பதிவுக்கு நேரே வருவவர்கள் முடிவே முதலாய் படிக்கவும்.

"முடிவே முதலாய்" உருவான கதை கதையை விட சுவாரிசியமானது அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.

முதலில் உண்மையில் என்ன நடந்தது என்றால் என் நண்பர் (1) ஒரு நாள் காலை இன்னும் முப்பது நிமிடத்துக்குள் பத்தாயிரம் என் வங்கி கணக்குக்கு அனுப்ப முடியுமா? என்று ஈமெயில் செய்து கேட்டிருந்தார், நான் என்னிடம் இல்லாததால் என் நண்பனிடம் (2) அனுப்பச்சொல்லி நண்பனுக்கு (1) அனுப்பினேன். இது எல்லாம் நடந்தது பத்து நிமிடங்களுக்குள். இது நடந்து முடிந்தபின்  பேசியே போதுதான் தெரிந்தது என் நண்பன் (2) அவன் வீட்டுக்வங்கி கடனுக்கு உரிய பணத்தை அனுப்பி வைத்தான் என்று. இதில் என்ன கொடுமை என்றால் என்னிடமும் என் நண்பரிடமும்(1) வீட்டுக் கடனுக்கு உரிய பணம் வங்கியில் இருந்தது. ஆனால் என் நண்பனோ (2) அவன் வீடுக் கடனுக்குரிய பணத்தை அனுப்பியிருந்தான் ஏன் என்று கூடக்  கேட்காமல்.

இப்போது கதைக்கு வருகிறேன். இதை கதையாக்க  வேண்டும் என்று நினைத்தேன். கே ஆர் பி செந்தில் வேறு கதையில் ஒரு டுவிஸ்ட்டு வையுங்கள் என்றதால் அதில் சிறிது சுவாரிசியத்தை கூட்ட கதையில் வரும் நாயகன் குமாரின் பணமே அன்பரசின் வழியாக சதீஷ் குமாருக்கே அனுப்புவதுபோல் அமைத்தேன். இந்த முடிவை எழுத மூன்று விதமான முடிவு எழுதி எதுவும் திருப்தியில்லாததால் நான்காவதான ஒரு முடிவை எழுதினேன். அதுதான் இப்போது கதையில் உள்ளது.  கதையில் நண்பர்கள் பெயர் இருக்கும் இடம் எல்லாம் மாற்றினேன். அப்புறம் வெளிநாட்டில் இருக்கும் இருவர் இந்தியாவில் இருக்கும் நண்பனை சுற்றி வருவதாய் கதையை எழுதினேன். கதையில் வருவதுபோல் இந்திய இளஞர் தன்னிறைவு வாழ்வு  என் ஆசை அல்லது நான் என் முதுமையில் வாழவிரும்பும் வாழ்க்கை.

இக்கதைக்கு முதலில் "அதே பணம்" என்று ஒரு தலைப்பு வைத்தேன். முடுச்சு படிக்கும்போதே வாசகர்கள் யூகிக்கக்கூடும் என்று தலைப்பை "முடிவே முதலாய்" என்று மாற்றினேன். மேலும் முதல் என்றாள் வழக்கில் முதலிடு... பணம்..செல்வம் என்று ஒரு பொருள்...இக்கதையிலும் பணம் ஒரு மையப்பொருள் மற்றும் அந்தப் பணம் ஆரம்பிக்கும் இடத்தை திரும்பி வந்து அடைவதால் இது பொருந்தும் என்று நினைத்தேன்.

நான் ஒரு பதிவராக எழுதிய கதையின் முடுச்சைவிட நட்பே கதையில் மேலோங்கியிருந்ததை பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முடிவாக கே ஆர் பி செந்திலுக்கு, உங்களுடன் பேசியபோது பணம் தொடர் உருவானதும் அதற்காக உங்கள் தேடலும் என்னை மலைக்க வைத்தது. பணம் தொடர் உருவான பின்புலத்தை ஒரு தனிப் பதிவாக்க வேண்டுகிறேன்.

Thursday, August 19, 2010

முடிவே முதலாய் !

குயூப் 12B , இருபத்தி ஆறாவது தளம், டெம்பில் டவர்  , லாஸ் ஏஞ்சல்ஸ் @ அமெரிக்கா  

"அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மருத்துவக் காப்பீடு எடுக்க இன்று கடைசி நாள்."

இவ்வாறான ஒரு செய்தியை என் கணினி காலண்டர் நினைவுட்டல் செய்துகொண்டிருந்தது. கிளைன்ட் மீட்டிங் முடிச்சிட்டு வந்த என் மரமண்டைக்கு இப்போதுதான் உறைத்தது. மணிபார்த்தேன் 10.30 am என்றது. இப்ப இந்தியாவுல இரவு 11.00, இன்னும் ஒரு மணி நேரத்துல காப்பீட்டு கம்பெனியோட அக்கவுன்னுக்கு ஒன்பதாயிரம் இந்தியன் ரூபாய் அனுப்பி வைக்கணும். என் இந்தியன் வங்கியின் வலைதளத்துக்குள் நுழைந்த எனக்கு என் அக்கவுண்டின் இருப்பு பதினைந்து ஆயிரம் என்றது. இது வீட்டுக்  கடனுக்கு பத்தாம் தேதி கட்ட வேண்டியபணம். இதுல கைவச்சா பத்து நாளைக்குள்ள ஏற்பாடு பண்ணமுடியுமா தெரியல. யோசிக்க நேரம் இல்ல ஏதாவது பண்ணனும்.

எங்க அப்பவேறே ஏன்டா தேவையில்லாம எங்களுக்கு வருஷம் வருஷம் பணம் கட்டுறே. எங்களுக்கு கட்டுன பணத்த சேர்த்து வச்சுருந்தா இந்நேரம் ஒரு லட்சம் சேந்திருக்கும் என்பார். அவருக்கு புரியலே. நான் வேறே ஊர்ல இல்ல... அவங்க ஒடம்புக்கு ஒன்னுனா எங்க போயி பணம் பொரட்டு வாங்க. காப்பீடு இருந்தாலாவது எதையும் எதிர்பார்க்காம ஆஸ்பத்திரியிலாவது சேருவாங்க.

இந்தமாதரியான இக்கட்டுக்கு கைகொடுக்குற ஒரேஆளு அன்பரசு தான். என் பள்ளி நண்பன். சொந்த ஊரிலே வாத்தியார் வேலை பார்க்கிறான். அப்படியா அவன் சொந்த நிலத்துல விவசாயம் செய்யுறான். என் மாதரி அகலக்காலு வைக்காம எல்லாத்தையும் அளவா பண்ணிக்கிட்டிருக்கான். அவனுக்கு பெருசா செலவும் இல்ல. நான் அமெரிக்காவுல இருந்தாலும் என் அவசர தேவைக்கு அவனைத்தான் நாடுவேன். ஆனால் அவன் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்குற ஆளு.  

யோசித்துக் கொண்டிருக்கும்போது யூ கே  வில்  இருக்க என் நண்பன் சதீஷ்யை ஆன் லைனில் பார்த்தேன்.

"டேய் சதீஷ்... எனக்கு அவசரமா ஒன்பதாயிரம் வேனுமுடா"

"சரிடா... நான் அனுப்பி வச்சுட்டு மெயில் அனுப்பிறேன்"

"அவசரம்டா...  கட்டாயம் அனுப்பிவைக்கணும்... சரியா"

"சரிடா"

சதீஷ் என்னை மாதரிதான் வீடு காரு நகைன்னு எல்லாக்  கடனும் வாங்கியிருக்கான். அவனும் என்னப்போலதான் அக்கவுண்டை தொடச்சுதான் வச்சுருப்பான். என்னமோ நல்லா நேரம்  அவன் கிட்ட பணம் இருந்துருக்கு கேட்டவுடனே சரின்னுட்டான்.  ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது. அடுத்த மீட்டிங்  க்கு தேவையான கோப்புகளை கணினியில் வாசிக்க தொடங்கினேன். என் போன் வைபிரேட்ல் மேசையை வட்டம் அடித்து அன்பு... அன்பு... என்றது. 

"என்னடா அன்பரசு... இந்நேரம்... நீ  தூங்கலையா?"

"பத்தாயிரம் என் அக்கவுண்டுக்கு அனுப்பி வையுடா"

"நீ எப்பவுமே அக்கவுண்டுல ஒரு லட்சம் வச்சிருப்பையில... என்னாச்சு?"

"இல்லடா குமார்... நிலம் ஒன்னு ரெசிஷ்ட்டர் பண்ணினேன் அதான்..."

"சரிடா அனுப்புறேன்... பத்து நிமிஷம் கழிச்சு உன் அக்கவுண்டுல பாருடா...."

போனை துண்டித்தேன். என்னைக்குமே கேக்கமாட்டான். வீட்டுக்கடனுக்குரிய பணத்திலிருந்து பத்தாயிரம் அனுப்பிவைத்தேன். 

சிறிது நேரத்தில் சதீஷ் ஒன்பதாயிரம் அனுப்பியதாக இமெயிலில் உறுதிசெய்திருந்தான். என் அக்கவுண்டுக்கு மறுபடியும் போயி அம்மாவுக்கும் அப்பாவுக்குமான மருத்துவா காப்பீட்டுத்தொகை  ஒன்பதாயிரத்தை அனுப்பிவைத்தேன். இப்ப வீட்டுக் கடனுக்கு பணம் ஏற்பாடு பண்ணனும்.

கணினி மேசை, தோட்டவீடு - அன்பகம் ,  வாடிப்பட்டி @ இந்தியா

"ஏங்க... நடுராத்திரி தூங்காம கம்யூட்டரல என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க" தூக்கம் களைந்து எழுந்த அன்பரசின் மனைவி.

"சதீஷ் பத்தாயிரம் வேணுமுன்னு கேட்டு போன்பண்ணியிருந்தான்... என்கிட்ட இல்ல அதான் குமார்கிட்ட வாங்கி சதிஷ்க்கு அனுப்பினேன்"  மனைவிக்கு பதில்ச் சொல்லிக்கொண்டே கணினியை ஆப் செய்தான் அன்பரசு.



Tuesday, August 17, 2010

உமா சங்கர் அவர்களுக்கு ஆதரவாக...


நண்பர்களே.. இதுஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆதரவு தெரிவிக்கும் முயற்சி.. இதைவாசிக்கும் எல்லோரும் தாங்களும் தங்களுடைய பதிவில் இதேபோல ஒரு இடுகையைப் போட்டு.. அதிகாரத்துக்கு எதிரான உங்கள்கண்டனங்களையும், நேர்மைக்கு துணை நிற்க வேண்டும் என்கிற மனஉணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்..


"உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் ஒரு சிலஅதிகாரிகளையும் அதிகாரம் கொண்டும் அடக்க முயற்சிக்கும்அரசுக்கு தீவிரமான கண்டனங்கள்.. சுயலாபத்துக்காகஅதிகாரிகளைப் பழிவாங்கும் போக்கினை இந்த அரசு கைவிடவேண்டும்.. துணிச்சலாக அரசை எதிர்த்து நிற்கும் உமாஷங்கரின்நேர்மையைப் பாராட்டுகிறோம்.."



Sunday, August 15, 2010

பாத்திரம் அறிந்து


யோகா வகுப்பறை முப்பது பேர் இருக்கும் நான் ஒருத்தன் தான் இந்தியன். யோகா என்னமோ நம்ம ஊரு விஷயமா இருந்தாலும் இங்கதான்  நெறைய பேர் யோகா செய்யுறாங்க. லாஸ் ஏஞ்சல்ஸ்ல பிக்ரம் யோகா மட்டும் பத்து இடத்துல இருக்கும். யோகா டீச்சர் சைனாக்காரி அமெரிக்காவிலே பிறந்தவளா இருக்கணும் அழகான ஆங்கிலத்தில் வகுப்பெடுத்தாள். "பாலா... யோகா புக் நாளைக்கு கொண்டுவரயா? " என்றாள் என்னுடன் யோகா படிக்கும் மாணவி. சரி என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தேன் ரயிலை பிடிக்க.

கிராண்ட் அவின்யுவின் சந்திப்பில் சாலையை கடப்பதற்கான விளக்குக்கு காத்திருந்தேன். என்னை நோக்கி ஒரு கறுப்பினக்கிழவர் வந்தார். கருப்பினதவரை சாலையில் தனியாக சந்திப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. காசு கேட்பார்கள் தரவில்லை என்றால் மொத்தப்பரம்பரையும் திட்டுவார்கள். சாலைவிளக்கு வரும்வரை காத்திருக்கவேண்டிய கட்டாயம். ஆனால் அவரோ  என்னை கடந்து சென்று அங்கிருந்த குப்பைத்தொட்டியில் பாட்டில்களை சேகரிக்கலானார். ஒரு பாட்டில் ஐந்து சென்ட் இருபது பாட்டில் சேர்த்தால் ஒரு டாலாக்கு மெக்டானலில் பர்கர் வாங்கிச்சாப்பிடலாம். பச்சை வந்ததால் சாலையில் இறங்கி நடந்தேன்.

சிவிக் ரயில் நிலையத்தில் யூனியன் ஸ்டேஷன் செல்லும் ரெட் லைன் ரயிலுக்கு காத்திருந்தேன். அங்கு வந்த நடுத்தரவயது கிழவி அவள் நெஞ்சில் கைவைத்து "இந்தியன்..." என்றும். என்னை காட்டி "இந்தியன்?" என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டாள். நான் தலையசைத்து ஆமோதித்தேன்.  "ஆர்டிசியா?" அங்குதான் போறியா என்பது போல் கேட்டாள். இல்லை என்பதாய் தலையசைத்தேன். மெச்சிக்கோ நாட்டுக்காரி என்று அவள் ஆங்கிலத்தில் இருந்தே தெரிந்தது. கூரையயை நோக்கி கையைக்காட்டி தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டாள். ரயில் அட்டவணை அறிவிப்பு மின்திரையை நோக்கினேன் அவளை தவிர்ப்பதற்காக.  அவள் என்னை தொட்டு "நோ ஹோம்... ஒன் டாலர்" என்று கேட்டாள். அதற்குள் ரயில் வந்தததால் ரயிலில் ஏறினேன் அவளுக்கு பணம் கொடுக்காது.

யூனியன் ஸ்டேஷனில் இறங்கி பெசடினா சொல்லும் கோல்ட் லைன் ரயில் பிளாட்பார்மை நோக்கி நடந்தேன். என்னை ஒரு இளம்வயதுக்காரி இடைமறித்தாள். அவள் நிறைய இடத்தில் கிழிந்த ஒரு பனியனும், முழங்காலுக்கு கீழே இரண்டு இடத்திலும் மேலே ஒரு இடத்திலும் கிழிந்த ஜின்ஸ் அணிந்திருந்தாள். இங்கு கிழிந்த ஆடை அணிவது ஒரு பேஷன். ஒன் டாலர் பிப்டி சென்ட் ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றாள். பர்சில் தேடி இருந்த என்பது சென்டைக்கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

இரவு எட்டுமணிக்கு மேல் ஆனதால் அடுத்து பத்து நிமிடம் கழித்து தான் என் ரயில் வரும். பாட்டு கேட்கலாம் என்று MP3 பிளையரை லேப்டாப் பேக்கில் தேடினேன். லேப்டாப் பேக்கில் இருந்த பிப்டி சென்டை கொடுக்கலாம் என்று அவளை தேடிப்போனேன். அவள் அங்கு இல்லை. எதிரே இருந்த ஸ்டார் பக்ஸ் கடையில் சாப்பிட டோநட்ஸ் வாங்கிகொண்டிருந்தாள். திரும்பி பிளட்பாமிர்க்குள் நுழைந்தபோது ரயில் கதவு அடைப்பதற்கான அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது ஓடி ரயிலில் ஏறினேன். ரயில் கதவு என் முதுகுக்குப் பின் அடைத்தது.

ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் ரயிலை தவற  விட்டிருப்பேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கண்ணை மூடினேன். ஏனோ அந்த வீடில்லாத மெக்சிக்கன் பிச்சைக்காரக்கிழவி என் மனதில் வந்து போனாள்.

Wednesday, August 11, 2010

மாறி மாறி... ஒரே மாறி...



அதிகாலை நாலு மணி டிரைவர் வீடு @ பழங்கானத்தம், மதுரை.

இழுத்து அணைத்த புருசனின் கையை தட்டிவிட்டு குழந்தையை தூக்கத்தில் தேடினாள் டிரைவரின் மனைவி. தூக்கம் கலைந்த டிரைவர் மனைவி தட்டிவிட்ட கையில் மணி பார்த்து எழுந்தான். குழந்தையும் மனைவியும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர். எழுப்ப மனமில்லாது குளித்து டூடிக்கு கிளம்ப ஆயத்தமானான்.

"ஏங்க... சாப்பிட ஏதவாது பண்ணித்தரவா?" பாதி தூக்கத்தில் மனைவி கேட்டாள்.

"இல்லமா... நீ தூங்கு, நான் டிப்போ கேண்டின்லே ஏதாவது சாப்புட்டுக்கிறேன்."

கதவை வெளியே பூட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்து கைகாட்டி அரசு பேருந்தில் ஏறி டிப்போவுக்கு போனான் டிரைவர்.

காலை ஏழு மணி மீனாச்சி வீடு @ மேலமாசி வீதி, மதுரை.

"துப்பட்டா எங்கடி? "

"அம்மா... சுடிதாருக்கு துப்பட்டா போடுறது எல்லாம் ஓல்ட் பேஷ்ன்ம்மா... இப்ப யாருமே துப்பட்டா போடறது இல்லம்மா..."

"யாரு போடுறாங்களோ இல்லையோ... நீ போடணும்."

துப்பட்டாவை தேடிக்கொடுத்து, இரண்டு முழம் மல்லிகைப்பூவை ரெண்டாக மடித்து சடைதொடங்கும் இடத்தில் வைத்து  கேர்ப்பின் குத்தினாள் மகளுக்கு.

அம்மாக்கு டாட்டா காட்டி துப்பட்டாவை கழுத்தை சுற்றி முன்னும் பின்னும் போட்டுக்கொண்டு சூர்யா படம் போட்ட நோட்டை அணைத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள் மீனாச்சி.

காலை ஏழு பதினைந்து சுந்தர் வீடு @ காகாத்தோப்பு தெரு, மதுரை.

"அம்மா நூறு ரூபா கொடு ரெக்காடு நோட்டு வாங்கனும்"

"ஏன்டா போனவாரம் தானே ரெக்காடு நோட்டு வாங்கானும்முன்னு பணம் வாங்கிட்டு போனே"

"அது வேற படத்துக்கும்மா" புருவத்தை உயர்த்தி நாக்கை கடித்துக்கொண்டு பாடத்துக்கும்மான்னு சொல்லாம  படத்துக்கும்மான்னு உளறிட்டேயேடா.... தனக்குள் தன்னை திட்டிக்கொண்டான்.

"என்னமோ சொல்றே... நோட்டு வாங்கினா சரி" என்று நூறு ரூபாய் கொடுத்தாள் இவன் பதிலை சரியாக கவனிக்காத அம்மா.

அம்மா கொடுத்த நூறு ரூபாயை ஜீன்ஸின் பின்பாக்கெட்டில் சொருகிக்கொண்டு ஆள் காட்டி விரலில் ரஜினி படம் போட்ட நோட்டைச்  சுற்றிக்கொண்டு கிளம்பினான் சுந்தர்.

காலை ஏழு முப்பது செக்கனுரணி பேருந்து @ பெரியார் பேருந்து நிலையம், மதுரை

மீனாச்சி முன்படிக்கட்டு வழியாக ஏறி டிரைவர்க்கு  இடப்புறம் உள்ள ஒருவர் மட்டும் அமரும் இருக்கையில் இடம் பிடித்தாள்.

பேருந்தில் ஏறிய சுந்தர் டிரைவர்க்கு  நேர் பின்புறம் சன்னலோர இருக்கையில் உக்கார்ந்தான்.

டிரைவர் முன்பக்கமுள்ள சிறிய கதவை திறந்துகொண்டு ஏறும்போது சுந்தரை பார்த்து சிரித்தார். சுந்தரும் சிரித்தான்.

நடத்துநரின் விசிலுக்கு வண்டியை கிளப்பிய டிரைவர் இடப்புறம் திரும்பிக் கண்ணாடி பார்த்தபோது டிரைவரை பார்த்து சிநேகமாக சிரித்தாள் மீனாட்சி.

அதே பேருந்து... அதே மூவர்... அதே சிரிப்பு... அதே order-ல்... எந்த மாற்றமும் இன்றி. ஒருநாளாவது தன்னையும் பார்த்து சிரிக்கமாட்டாளா? ஒரு வருசமா அவள் சிரிப்புக்காக காத்திருக்கிறான் சுந்தர்.

மறுநாள் 
(கதையை மறுபடியும் முதலில் இருந்து படிக்கலாம்.... இல்லை, இதோ கீழே உங்களுக்காக)

இழுத்து அணைத்த புருசனின் .................................... டிப்போவுக்கு போனான் டிரைவர்.

துப்பட்டா  எங்கடி? .................................................................... கிளம்பினாள் மீனாட்சி.

அம்மா ................................................................................................. கிளம்பினான் சுந்தர்.

மீனாச்சி ....................................................................................... காத்திருக்கிறான் சுந்தர்.

பின்குறிப்பு: மறுநாள் அத்தியாயம் மட்டும் "computer program" பாணியில் இதோ உங்களுக்காக.
சுழற்சி(சரி)  // சுழற்சி எல்லா நேரமும் சரி 
{
      மாறி மாறி... ஒரே மாறி...;  // முழுக்கதை மறுபடியும்  நிகழும்
      காரணம் (அவள்_இவனை_பார்த்து_சிரித்தாள் == சரி)
      {
             விடுபட்டு; //சுழச்சியில் இருந்து விடுபடு. கதை வேறுதளத்திற்கு செல்லும்.
      }
}
// விட்டுபட்டப்பின் என்னசெய்வது என்பது கதையின் "scope" ல் இல்லை. அதனால் இங்கு விவரிக்கப்படவில்லை.

பார்வையாளர்: எல்லா software ம் requirement scope ல் இல்லன்னு சொல்லி தப்பு தப்பாதான எழுதிறிங்க.
நான்: என்னது.... நீங்க சொல்றது சரியா புரியல? இன்னொரு தடவ சொல்லுங்க.
பார்வையாளர்: அட கொக்கமக்க... ஒண்ணுமே தெரியாது மாதரி நடிக்காதே... இது ஒன்னும் requirement gathering meeting இல்ல.




Monday, August 9, 2010

அன்பே சிவம் ஒரு புரிதல்


அன்பே சிவம் இது ஒரு விமர்சனம் அல்ல, இது படம் குறித்த என் புரிதல் என்று கொள்ளலாம். இந்த படம் புவனேஸ்வர்  விமானநிலையத்தில் தொடக்கி, ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து ஒரு பேருந்தில் பயணப்பட்டு, மறுபடியும் ரயிலுக்கு தாவி, ஆம்லன்ஷில் கடந்து, அம்பாசிடரில் ஊர்ந்து கதையின் இறுதிப்பகுதிக்கு செல்லும்.
அதேபோல் கதை ஒரு மழைக்காலத்தில் புவனேஸ்வரில் ஆரம்பிப்பதால் கதை நெடுக மழையும் பயணப்பட்டு இருப்பதையும் அழகாக காட்டப்பட்டு இருக்கும். சென்னையை நெருங்க நெருங்க அதன் தாக்கமும் குறைந்திருக்கும்.
கதை ஒரு கம்யூனிஸ்ம் சார்ந்ததால் கேரளா (நல்லா பாலா கல்யாணத்திற்கு இங்கு தான் பயணப்படுவார்கள்) என்று கம்யூனிஸ்ம் சார்ந்த நிலப்பரப்பில் கதை நிழந்திருக்கும். இதை மேலோட்டமாக மட்டுமே காட்டப்பட்டிருக்கும்.
நல்லசிவம் அன்பரசுக்கு சிவமாக அறியபடும் அன்பரசு அரசுவாக அறிப்படும். அரசுவின் காதலி சரசு (அதாவது பாலாவாக நல்லாவுக்கு அறியப்பட்டவர்) சிவத்திற்கு அறிந்திருக்க முடியாது என்பதுபோல் அழகாக காடப்பட்டிருக்கும். அதே போல் பாலா அரசுக்கு தெரியாததுபோல் கதை சொல்லப்படிருக்கும். இருவரும் தத்தம் காதல் குறித்து பரிமாறிக்கொண்டாலும் ஒரே பெண் வேறு வேறு பெயரில் விளிக்கப்படுவாள். அல்லது கதையின் ஆசிரியர் நல்லாவின் காதலி பாலா வேறு...அவள் புதிதாக மாறியிருக்கிறாள் (சரசு) என்று சொல்லாமல் சொல்லியிருக்கலாம். நல்லாவின் கடிதத்தை பாலா படித்தபோதும் அவன் சிவமாக கடிதம் முடித்திருப்பதாலும் அவன் கையெழுத்து மாறியிருப்பதாலும் ( விபத்து காரணமாக) பாலா நல்லாவை அடையாளம் காணமுடிவதில்லை.
நல்லசிவம் நல்லாவாக (கதையின் எடுத்துக்காட்டில்) கருப்பு நிற உடை பெரும்பாலும் அணிந்திருப்பான் மற்றும் கடவுள் மறுப்பு அதிகம் இருப்பது போலும் காட்டப்பட்டிருக்கும். கதையின் நிகழ்காலத்தில் சிவமாக சிவப்பு நிற உடை அணிந்திருப்பார் அதிகம் கம்யூனிஸ்ம் பேசுவார்.  சிவம் நானே கடவுள் என்றும் கூறிகொள்வார்.
சிவத்திற்கும் அரசுக்கும் கடவுள் குறித்த விவாதத்தின் நடுவே சிவம் சொல்வதாக ஒரு வசனம் வரும் 
"மலைமேலே பொட்டிக்கட வச்சிருந்த ஆயா சொல்லுச்சி அன்னைக்கிலே இருந்து நம்பிட்டேன்" என்று.
எடுத்துகாட்டில் கதையில் விபத்துக்கு பிறகு "நீங்க சாமி மாதரி அதன் பொலச்சுகிட்டிங்க" என்று வசனம் இருக்கும்.
கதையின் தலைப்பு "அன்பே சிவம்" 
அன்புதான் கடவுள் என்றும் கொள்ளலாம்.
அன்பரசு அவனுள் இருக்கும் அன்பை(கடவுளை) புரிந்து கொண்டான் என்றும் கொள்ளலாம்.

அன்பே(ரசு) (நல்ல)சிவம் இருவரின் புரிதல் குறித்த கதை என்றும் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது வேறு வேறு விசயங்கள் புரிகிறது.

Saturday, August 7, 2010

என்னை பற்றி நான் - தொடர் பதிவு


வெறும்பய ஜெயந்த் உனக்கு அப்படி என்ன கோவம் என்மேல் (உன்ன வெறும்பயன்னு ரெண்டு மூனு தடவை பின்னூட்டத்தில் சொன்னதுக்காகவா?). நான் எதோ வந்தமா எனக்கு தோன்னத எழுதுனமான்னு நான் பாட்டுக்க என் வழியில போயிகிட்டு இருந்தேன். இருக்கதிலே ரெம்போ கஷ்ட்டம் தன்னை பத்தி சொல்றதுதான்னு (சொல்றதுக்கு ஒன்னும் இல்ல அது வேற விஷயம்) இத எழுதுரப்பதான் புரிந்தது. வெறும்பயலின் அன்பிற்காக எழுதுகிறேன். 

(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? & (2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
உலகிலே எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை என் பெயர் (எங்கோ எப்போதோ படித்தது, மிகவும் பிடித்ததும் கூட, உண்மையும் அதே). பிறப்பு, பெற்றோர், பெயர் இவை நான் தீர்மானித்தது இல்லை. என் பெற்றோர் என் மீது இட்ட சுவடு என் பெயரும் ஒன்று. என் எண்ணங்களை எனக்கு பிடித்த என் பெயரிலே எழுத விரும்பினேன். 
(3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
அமெரிக்காவில் மூன்றாவது முறை இறங்கிய முதல் நாள் StarBucks ( நம்ம ஊரு நாயர் டீ கடை மாதரி) வரிசையில் நிற்கும்போது ரெம்ப நாளைக்கு அப்புறம் ஒரு (ஏனோ இன்று...) கவிதை தோன்றியது அதை என் பேப்பர் காபி கப்பில் எழுதினேன் (காதலிக்கும்போது கவிதை எழுதியது என் காதலிக்காக இப்போது என் மனைவி).  கவிதையை படித்த என் நண்பன் சரவணன் blog பத்தி சொல்லி ஆரம்பிக்கச் சொன்னான். என் மற்றொரு மலையாளி நண்பன் Finsen முதல் கவிதையின் ஆங்கில மொழிமாற்றத்தை கேட்டு சில context சொல்லி எழுத ஊக்கபடுத்தினான். அப்போது ஆரம்பிக்கலே மாசம் கழிந்து ஆரம்பித்தால் என்ன என்று தோன்றி ஆரம்பித்தேன்.
(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன வெல்லாம் செய்தீர்கள்?
ஆரம்பித்த புதிதில் யாராவது வாசிக்கமாட்டார்களா என்று தோன்றியது. நாட்கள் ஆக ஆக என் பார்வையை நான் கடந்து வந்ததயை பதிவு செய்யும் திருப்பதி அதிகமாகியது. மாதவராஜ் என்னை புதிய பதிவர்கள் அறிமுகத்தில் அறிமுகபடுத்தினார். அதன் மூலம் சிலர் (வால்பையன்♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫goma,ஆவி அறிமுகம் கிடைத்தது அவர்களின் பின்னூட்டம் என்னை எழுத ஊக்கப்படுத்தியது. 
(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை  என்றால் ஏன்?
என்னை பாதித்ததை நான் பார்த்ததை என்னை கடந்து சென்றதை என் பார்வையை இன்றைய மனநிலையில் இருந்து எழுதுகிறேன்.  என் சொந்தவிசயங்கள் என்று தனியாக எதையும் எழுதவில்லை ஆனால் பதிவின் நடுவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் என் விசயமும் இருக்கும் ஆனால் எண்ணங்கள் விவாதங்கள் எல்லாம் என்னுடையது. 
(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
போழுதுபோக்குக்காகவோ... சம்பாதிப்பதற்காகவோ...  எழுதவில்லை.   பாதித்ததை பதிவு செய்த திருப்தி. அதனால் மற்றவர்களுக்கு உபயோகப்பட்டால் சந்தோசம்.
(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்னுக்க கண்ணுமுழி பிதுங்குது. தமிழில் சிந்திப்பதால் தமிழில் மட்டுமே எழுதுகிறேன்.
(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்?
யார் மீதும் கோவம் இல்லை. அன்பையும் வாழ்வின் புரிதலையும் பகிர்ந்து கொள்ள ஒரு அழகான இடம் இது. ஆனால் எனக்கு சிலர் மீது பொறாமையுண்டு. கே.ஆர்.பி.செந்தில்ஜெகநாதன் இருவரின் எழுத்து என்னை மிகவும் பாதித்துள்ளது. மற்றவர்கள் கோவித்து கொள்ளவேண்டாம் எனக்கு படிக்க அதிகம் நேரம் இல்லை.  இவர்களின் மிதான பொறாமை என்னை அடுத்தநிலைக்கு இட்டு செல்ல உதவும் என்று நம்புகிறேன். மற்றவர்களையும் படிக்க முயற்சிக்கிறேன்.
(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
எல்லா பின்னூட்டங்களும் என்னை ஒரு விதத்தில் பாராட்டியதாகவே கருதுகிறேன். ஜோதி என்ற என் பதிவிற்கு ஜெகநாதனின் பின்னூட்டம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது என்னை மிகவும் கவனமாக இருக்க வைத்தது.  கே.ஆர்.பி.செந்தில், ஜெகநாதன், வெறும்பய, ஜில்தண்ணி, ஆண்டாள் மகன் , கோமதி, ஹேமா, ராமசாமி கண்ணன், நிலாமதி, கோவை ஆவி எல்லோரும் ஆரம்பகாலங்களில் என்னை பாராட்டி இருக்கிறார்கள். 
(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னைப் பற்றி விசேசமாக சொல்ல ஒன்றுமில்லை. என் பதிவுகளில்  என்னை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். முடிவாக பின்னூட்டம் இட்ட எல்லோருக்கும் நன்றி. 
இதை தொடர்வதற்கு அழைப்பது 

Thursday, August 5, 2010

அப்பா

அப்பா ஒரு தொடர். நேராக இங்கு வந்தவர்கள் அப்பா முதல் மற்றும் இரண்டாம்  வாரத்தை படிக்கவும்.






அம்மா இருந்திருந்தால் எனக்கும் அப்பாவுக்குமான தூரம் குறைந்திருக்கக் கூடும். என் பையன் அவர் கட்டிய வீட்டிலும் அவர் மடியிலும் தவழ்ந்திருப்பான். சம சுயகர்வம் உள்ள இரு ஆண்கள் விட்டுக்கொடுப்பது கடினம் என்றே தோன்றியது. உறவை எளிதாக்க  சில சமயம் பெண் அவசியமகிறாள். ஆனால் அப்பா அம்மாவுக்குமான இடத்தையும் சேர்த்தே நிரப்பியிருந்தார் என் இளமையில்.

புத்தகத்தில் படத்தைக்காட்டி என் பையன் கேட்டான் தாத்தான்னா யாருப்பா? போட்டோ காட்டி இவர்தான் தாத்தா என்றேன். ஏம்ப்பா நம்மாகூட இல்ல? எனக்கு பதில்சொல்ல தெரியவில்லை. அப்பா கிட்ட சொல்லணும் உங்களை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை என் பையனுக்கும் சொல்லுங்கள் என்று.

தூரத்தில் அப்பா. நடை தளர்ந்திருந்தது. என் கண்ணில் குபுக்கென்று கண்ணீர் வந்தது. அந்தப்பக்கம் திரும்பி துடைத்துக்கொண்டேன். நான் அழுதால் அப்பாவுக்கு பிடிக்காது. ஓடிப்போய் அப்பாவிடமிருந்து பையை வாங்கினேன். அவர் என்னை அங்கு எதிபார்த்திருக்கவில்லை.

"நீ எப்படி இங்க? நான்கூட உன்ன பார்த்து பேசனுமுன்னு இருந்தேன். உன்னை கேட்காம இந்த வீட்ட உங்க அண்ணனுக்கு எழுதிக்கொடுத்தது என் தப்புதான். உனக்கும் சமஉரிமை அந்தவீட்டில் உண்டு. உன்னைப்போல் இல்லை, அவன் இப்ப ரெம்ப கஷ்ட்டபடுறான், அவனுக்குன்னு ஏதாவது வேணும் என்று செய்தேன். அவன்கூட உன்னை கேட்க வேண்டும் என்றான். நான்தான் வற்புறுத்தி இதை செய்தேன். உனக்கு புரியும்."

"இல்லப்பா.. நான் அதுக்கு வரலே... உங்ககளை வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போகலாம்முனு வந்தேன். நீங்க எங்க கூடவே இருந்திருங்கப்பா"

"இல்லடா அது சரிவராது. அண்ணனுக்குகூட நான் ஊருக்கு போவதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் நான் கிராமத்துக்கு  போவது என்று முடிவு செய்து விட்டேன்."

"அப்பா பழசெல்லாம் நெனச்சுக்கிட்டு வரலேன்னு சொல்லவேண்டாம். அன்று உங்கள் நம்பிக்கையை உடைத்ததற்கு மன்னிக்கணும்."

"என்னைக்கு நான் சொன்னத பொய்யாக்கி வாழ்க்கையில ஜெயிச்சிட்டையோ. அன்னைக்கே உன்னை நான் மன்னிச்சுட்டேன். ஆனாலும் பாதி இரவில் ஒரு பொண்ணு கூட இருந்தும் உன்னை வீட்டை விட்டு அனுப்பியிருக்கக் கூடாது. அந்த பொண்ணை பார்க்கவே கஷ்ட்டமா இருக்குடா"

"இல்லப்பா... அவளுக்கு உங்கள புரியும்ப்பா... நீங்க வாங்கப்பா உங்கள் வாழ்க்கையை என் பையனுக்கு சொல்லிக்கொடுங்கப்பா..."

"இல்லடா... லீவுக்கு ஊருக்கு உன் பையனை கூட்டிட்டு வா... உன் வேர் எங்கிருந்து வந்தது என்று காட்டு... அவனுக்கு வாழ்க்கையின் எல்லா பக்கமும் புரியும்... என் அப்பா எனக்குன்னு வாங்கிய ஒரு ஏக்கர் நிலம், அந்த ஓட்டு வீடு, என் கடைசி காலத்தை அங்கு கழிக்க விரும்பிறேன். எனக்கு... என் அப்பாவுக்கு... பிடித்த வாழ்க்கையை இப்பவாது வாழறேன். என்னை வற்புறுத்தாதே."

அப்பா ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். கையசைத்தேன் கலங்கிய கண்களுடன் நான் அழுவது அப்பாவுக்கு பிடிக்காது என்று தெரிந்தும்.