வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, August 19, 2016

விதை நெல் - நெல் இரண்டு

விதை நெல் - நெல் ஒன்று.

அங்கிருந்து நகர்ந்த நான் காலாற நடந்தேன். நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. எனக்கு கண்டிப்பாக தெரியும். அந்த கேள்வி ஆத்தாளை கஷ்டப்படுத்தும் என்று இருந்தும் ஏன் கேட்டேன். வருத்தமாக இருந்தது.

சுயநினைவு வந்தபொது வெகுதூரம் வந்திருந்தேன். ஊருக்கு வெளியே இருந்த சிறிய ஓடையின் கரையில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன் மறுகரையை பார்த்துக்கொகொண்டு. உடனே வீட்டுக்கு போக மனம் வரவில்லை. அந்த ஓடைக்கு நடுவே ஒரு அய்யனார் கோவில் இருக்கு. அங்கு போய் கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் போல இருந்தது. கரையில் இருந்து இறங்கி கோவிலை நோக்கி நடந்தேன்.

அது ஆற்றுக்கு நடுவே இருக்கும் கோவில். இந்த ஆற்றில் தண்ணீர் புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மட்டும் ஓடும். அதும் கெண்டைக்கால் அளவுக்குத்தான் ஓடும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகா இருக்கும். இது மார்கழி மாதம் ஓடையில் தண்ணீர் இல்லை ஆனால் மணல் ஈரமாக இருந்துது. ஒரு இரண்டு அடி தோண்டுனா தண்ணீ வரும். செருப்ப கழட்டி கையில் எடுத்துக் கொண்டு வெறும் காலில் நடந்தேன். வெறும் காலில் நடக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதே ஓடையில் நாள் முழுக்க வெளையாண்டு இருக்கேன். இன்னக்கி ஒரு பத்து அடி வெறும் காலில் நடக்க முடியல. இத்தனைக்கும் பண்ணிரெண்டாவது படிக்குற வரைக்கும் செருப்பு போட்டது இல்ல இந்த மூணு வருசம் தான் செருப்பு போடுறேன். அதுக்குள்ள பாதம் தாங்கல.

கோவிலை ஒட்டிய ஆலமரத்தடியில் அமர்ந்தேன். ஆலமரத்தில் மணியும் அறுவாலும் நேர்த்திக்கடனுக்கு அடித்து தொங்க விட்டிருந்தனர். உபயமும் பேரும் துறு ஏறி இருந்தது. மேற்கூரை இல்லாத சுற்றுச்சுவர் மட்டும் உள்ள கோவில். செங்கலால் அடுக்கப்பபட்டு மண் பூசியமேடை அதில் ஒரு சிறிய அலமாறி எண்ணெய் விளக்கு ஏற்ற. வெளியே இரண்டு பெரிய குதிரை நிற்க உள்ள கம்பிரமாக ஒரு கையில் வெட்ட அருவா மறுகையில் ஆளுயர வேல்கம்பு முறுக்கிய மீசை கனல் தெறிக்கும் கண்ணுமாய் ஊரைக் காக்கும் அய்யனார் நின்றுகொண்டிருந்தார். ஊரைக் காக்கும் அய்யனார் அவரை காக்க ஒரு கூரையில்லை. ஆடி காத்திலும் பங்குனி வெயிலும் கார்த்திகை மழையிலும் ஊரை காத்து நின்றார் அய்யனார்.

என் இந்த வேறுபாடு கடவுள்களுக்குள் என்று தோன்றியது. யோசித்து பார்த்ததில் எந்த காவல் தெய்வத்திற்கும் கோவிலில் கூரையில்லை. நித்தியகால பூசையில்லை. வருடத்தில் ஒரு தடவை பொங்கல் படையலுடன் முடித்துக்கொள்வர். அப்புறம் பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. யாராவது வெளியூர் போனா எல்லையில் இருக்கும் சாமிக்கு ஒரு தேங்காய் உடைத்து விட்டு செல்வார்கள். அய்யனார் கூடவே சென்று பத்தரமா திரும்பி கொண்டு வருவதாக நம்பிக்கை. ஒருவேளை எங்க மாமாவின் மகன் தேங்காய் உடைக்காமல் சென்னைக்கு போயிருப்பாரோ? அதான் ஊருக்கு திரும்பி வரவே இல்லையோ?

திரும்பவும் ஆத்தாவும்... ஆத்தாவின் அழுகை மனதுக்குள் வந்தது. வருடங்கள் சில உருண்டு ஓடிவிட்டது இருந்தும் அவள் அழுகை மட்டும் ஓய்ந்த பாடில்லை. மாமாவின் மேல் கோவமும் வருத்தமும் மாறி மாறி வந்தது எனக்கு.

எங்க தோட்டத்துக்கு இந்த கோவில கடந்து தான் போகணும். அப்ப நான் சின்னபையன் நானும் எங்க ஆத்தா கூட தோட்டத்துக்கு போவேன். கோவிலை கடக்கும் போதெல்லாம் எங்க ஆத்தா "ஊர காத்த அய்யனாரே என் பிள்ளைகளுக்கு கை கால் சொகத்த கொடு... என் மகள என் அண்ண வீட்டுல வெளக்கெத்த வையு" வேண்டிக்கொள்வாள். ஊரைக் காக்கும் அய்யனார் என் ஆத்தாவின் நேத்திக்கடனை காக்க முடியவில்லை.

தொடரும்......

5 comments:

  1. நாட்டார் வழக்காற்றியல் சு​வையுடன் இருக்கிறது. ​​​நேர்த்திக்கட​னை நி​றை​வேற்றவும் :) ​தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆத்தாவையும் அய்யனார் மிஞ்சினாரோ?

    ReplyDelete
  3. ஆத்தாவையும் அய்யனார் மிஞ்சினாரோ?

    ReplyDelete
  4. நன்றி.... பார்ப்போம் வரும் வாரங்களில்.

    ReplyDelete