வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, May 6, 2011

எங்காத்தா


சின்னவன இருக்கையில
வெளையாட்டுல ஒரு ஆளு
என்னை அடுச்சுட்டான்னு
பெரிய ஆளுன்னும் பாக்காம
பளாருன்னு அறஞ்சா எங்காத்தா
பதறிப்போனா அந்தாளு
அவ்வளவு கோவக்காரி எங்காத்தா

ஏம்மகன நீ அடுச்ச
உன்ன நான் அடுச்சேன்
அடிக்கு அடி சரியாபோச்சு
இப்ப சொல்லு என்ன தப்பு
செஞ்சான் ஏம்மகன்?
தப்பு எம்மேலயும் இருக்குன்னு
என்னையும் சாத்து சாத்துன்னு
சாத்துனா எங்காத்தா
அவ்வளவு நாணயக்காரி எங்காத்தா

உமிய அவசேலயில எடுத்து
அவ அடுச்ச தடத்துல
சுடுதண்ணி ஒத்தடம்
கொடுத்து அவமடியில
ஒறங்க வச்சா எங்காத்தா
அவ்வளவு பாசக்காரி எங்காத்தா

6 comments:

  1. கிராமிய மன(ண)ம்.

    ReplyDelete
  2. சூப்பர்ன்னு ஒரு வார்த்தை பத்தாது இந்த கவியை பாராட்ட

    ReplyDelete
  3. கிராமத்து நொடி வீசும் வார்த்தைகள்

    ReplyDelete
  4. அம்மாவைப்பற்றி யதார்த்தமான வரிகளுடன் மண்மணம் கமழ்கிறது.

    வாழும் தெய்வம் நம் தாய்.... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. அருமை அருமை அருமை நண்பா

    ReplyDelete