வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Monday, April 18, 2011

பயணம் தொடருது


இருக்கையில் அமர்ந்தாள்  
நீண்டபெருமூச்சு விட்டாள்
சன்னல் திறந்தாள்
எங்கோ வெறித்தாள்
தூறலை தொட்டாள் 
முந்தானைமுக்காடு இட்டாள்
நகம் கடித்தாள்
புத்தகம் புரட்டினாள்
புன்னகை பூத்தாள்
புருவம் சுருங்கி யோசித்தாள்
புத்தகம் நழுவ தூங்கினாள்
சொம்பல் முறித்து எழுந்தாள்
கைகள்தேய்த்து கண்ணில் ஒத்தினாள்
கண்கள்மூடி காத்து வாங்கினாள்
தலைமுடி காதுக்கு ஒதிக்கினாள்
முந்தானை சரி செய்தாள்
அவள் நிறுத்தத்தில் இறங்கினாள் 
ஒத்தையடிபாதையில் நடந்து மறைந்தாள் 
சில நாட்கள்.......
சில மாதம்.......
சில வருடம்......
ஒத்தையடிபாதை நிறுத்தம் வரும்போது 
நிற்காமல்வருது அவள் நினைப்பு
பயணம் தொடருது அதேவழி

2 comments:

  1. ம்ம்ம் பல நாட்களுக்கு பிறகு பதிவு...அருமை..தொடரட்டும் பயணம்..

    ReplyDelete