வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, June 4, 2010

த்ரிஷாவும் நானும்










நான் பிறந்தபோது
அழுதேனோ தெரியாது 
நீ பிறந்தபோது 
அழுதேன் 

உயிரை பிரிந்ததாய்
உணர்ந்தேன் 
உன்னை விட்டு 
ஊருக்கு போகையில் 

நான்  வேண்டியது 
கிடைத்ததில்லை 
நீ வேண்டியது 
கிடைத்திட விளைகிறேன் 

என் நாள் 
உன் குரல் கேட்டு 
விடியவும் முடியவும் 
செய்யும்

விளையாட்டாய் 
நீ உன்மடியில் 
எனைசாய்த்தபோது
என் தாய்மடி உணர்ந்தேன் 

என் எல்லா 
திசையிலும் உன்குரல்
என் எல்லா 
பக்கத்திலும் உன்முகம்


1 comment:

  1. குழந்தையில் தாய்மை உணர்த்தும் கவிதை..
    உங்களுக்கும் த்ரிஷாவுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete