வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Saturday, January 22, 2011

அவளில்லா இரவு

நீ போனாலும்
போகலடி உன் வாசம்.

கண் முடினாலும்
மறையலடி உன் உருவம்.

என் சுவாசத்திலும்
சுடுதடி உந்தன் இளங்சூடு.

முழுக்க போர்த்தினாலும்
இல்லையடி உந்தன் கதகதப்பு.

தலையணை கூட
தல்லையடி அந்த இதம்.

மெத்தையில் கூட
இல்லையடி அந்த பதம்.

இரவின் நிசப்தம்
நினைவூட்டுதடி அந்தநேர மவுனம்.

பாதித்தூக்கத்தில் உனை
தேடுதடி என் பாழ்மனது.

கனவிலும் உன்னிடம்
தொடருதடி என் சீண்டல்.

நீளும் இரவு
குடிக்குதடி என் உயிர்.

உந்தன் பெண்மையிடம்
தோற்றதடி எந்தன் ஆன்மை.

உறக்கத்தில் கூட
கொல்லுதடி உன் பிரிவு.

எழுந்தப்பின்னும் கலைய
மறுக்குதடி உன் நினைவு.




4 comments:

  1. என்னாச்சுங்க...

    ReplyDelete
  2. ம் ம் காதல் கொள்ள வெளிகிட்டுது உங்களையும் வாழ்க வளமுடன்

    ReplyDelete