வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, July 29, 2010

அப்பா - 2

அப்பா ஒரு தொடர். நேராக இங்கு வந்தவர்கள் அப்பா முதல் வாரத்தை படிக்கவும். அப்பா - 1





வெறும் கையேடு வீட்டைவிட்டு வெளியேறினோம் அப்பா சென்னைக்கு வந்ததுபோல. அவள் எதுவும் பேசவில்லை. அப்பாகூட அன்று யாரும் இல்லை. என்னுடன் மற்றொரு ஆத்மா. என்னை மட்டும் நம்பி வந்தவள். அவளுக்கு காத்திருக்க நேரமில்லை, வேறுவழியில்லை. இந்த முடிவை எடுத்தாகவேண்டிய கட்டாயம் எங்களுக்கு. அப்பா புரிந்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் மீது தவறில்லை. அவர் வாழ்ந்த பார்த்த வாழ்க்கை வேறு. அப்பா மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  

ஆனால் இன்று நிலைமை வேறு. அப்பா வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். என் அண்ணனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு.  அப்பா ஊருக்கு போறாராம் என் நண்பன் போன்பண்ணியிருந்தான். அப்பா ஊருக்கு போகக்கூடாது. அவர் தோற்கக்கூடாது. ஊரில் அவர் பெருமை அப்படியே வாழ்க்கையில் ஜெயித்ததாகவே இருக்க வேண்டும்.

அப்புறம் அப்பாவை ஒரே ஒருமுறை பார்த்தேன். அப்பா குழந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். என் மனைவி மயக்கத்தில் இருந்ததால் அவரை பார்க்கவில்லை. என்னுடனும் அதிகம் பேசவில்லை. என் நண்பன் மூலம் அப்பாவுக்கு சிறு சிறு தேவைகளை செய்து தரச்செய்வேன். நான் செய்வதாக தெரிய வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அப்பா என் உதவியை ஏற்ப்பாரா தெரியாது.  போன் அடித்தது என் மனைவிதான்.

"சொல்லுமா"

"அப்பாவ பாத்திங்களா ?"

"இல்லமா வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்"

"அப்பாவுக்கு பிடுச்ச மொச்சபயிறு கொளம்பு வச்சிருக்கேன். ப்ரிச்ல இருக்கு. நீங்க வந்து ரைஸ் கூகர்ல ரைஸ் வச்சுகங்க. கொளம்பு மைக்ரோவேவ் பண்ணி அப்பாவுக்கு கொடுங்க . நான் பையன ஸ்கூல் இருந்து கூட்டிட்டு வந்திறேன். அப்பறம் சொல்ல மறந்திட்டேன். நீங்க படிக்கிற ரூம்பை அப்பாவுக்கு பெட் ரூமா மாத்திட்டேன். அது அப்பாவுக்கு வெளிச்சமாவும் காத்தோட்டமாவும் இருக்கும்."

"சரிம்மா"  போனை வைத்தேன்.

அப்பாகிட்ட சொல்லணும். என்னை எவ்வளவு பிடிக்குமோ... பையனை எப்படி பிடிக்குமோ... அவ்வளவு உங்களையும் அவளுக்கு பிடிக்கும்ப்பா... நான் காதலிக்கும்போது உங்களை பற்றி உங்கள் வாழ்க்கை பற்றி நிறையே அவளுக்கு சொல்லியிர்க்கேன்ப்பா என்று.

 அப்பா வந்தாரா ? இவனுடன் பேசினாரா ? அவளை பற்றி சொன்னானா? அப்பா வீட்டுக்கு வந்தாரா ? அடுத்தவாரம் பார்க்கலாம்.

15 comments:

  1. போய்வ்... முனியாண்டி.

    சீக்கிரம் அடுத்த பதிவை போடுய்யா... ஒரு வாரம் வெயிட் பனன முடியாது!

    இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்... நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  2. சார் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது எழுதுங்கள்... ரவி அண்ணே சொன்னது மாதிரி நாமளா கற்பனை செஞ்சு பார்க்கிற மாதிரி ஆயிடும்

    ReplyDelete
  3. செந்தில் அண்ணா ,கண்டிப்பா நம்மலதான் கற்பனை பண்ண விடுறாரு!

    ReplyDelete
  4. என்ன தலிவா அடுத்த வாரம் வரை காத்திருக்க முடியாது ?

    சீக்கிரம் :)

    ReplyDelete
  5. குடும்ப கதையில் கூட suspense வைத்து, தொடர இருக்கீங்க.... சூப்பர்!

    ReplyDelete
  6. நல்லா தான் போகுது... எப்போ அடுத்த பாகம்...

    ReplyDelete
  7. என்னங்க முனியாண்டி, தினத்தந்தி கன்னித்தீவு மாதிரி போய்கிட்டு இருக்கு!

    ReplyDelete
  8. ரொம்ப கேப் விடாம போடுங்க ..நல்லா இருக்கு படிக்க...

    ReplyDelete
  9. ம்...காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. நல்லா போகுதுங்க.. அடுத்த பார்ட் எப்ப :)

    ReplyDelete
  11. எனக்கு ஞாபக மறதி தலைவரே .எதிர்பார்ப்பை
    அதிகரித்துவிட்டது இன்றைய தொடரும் . மறக்காமல் அடுத்தப் பதிவை தெரியப்படுத்துங்கள் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. Now I can understand why mega TV series are successful in India! :-)
    Thanks,
    Vishnu

    ReplyDelete
  13. காத்திருக்கிறேன்.....

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் நண்பா!
    ‘ற்’ என்கிற எழுத்துக்குப்பின் ப்.ச்.க் போல மெய்யெழுத்துக்கள் வாரா (அதாவது வராது). சொற்செட்டு மற்றும் சேர்க்கை பற்றி உடனுரையாடும் நண்பர்களுடன் விவாதியுங்கள்.

    ReplyDelete
  15. வாசிக்க ஆவலாக் இருக்கிறது தொடருங்கள்

    ReplyDelete