வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, January 20, 2011

காலத்தின் கையில் நான்



காலத்தின் கையில் நான்
------------------------------
விதை இருந்து
விலகி கருயிருத்தி
குளிர்ந்து பெருத்து துளிர்த்து
விரிந்து பிரிந்து
முலை முட்டி
இலை விரித்து
இதம் கதகதப்பு வேண்டி
வேரிடமிருந்து விலகி
கிளை பரப்பி
மரமாகி பூத்து
சூல்கொண்டு காய்த்து
கனியில் கருவேற்றி
விதை நிறுத்தி
தாய்மண்ணில் வேர்விடுவேனா?

பச்சையம் இழந்து தளர்ந்து
உலர்ந்து சருகாகி
தள்ளாடி தள்ளாடி
அயல்மண்ணுக்கு உரமாவேனோ?

காலத்தின் கையில் நான்.

13 comments:

  1. அருமை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தனித்துவமான படைப்பு



    http://kavikilavan.blogspot.com/

    ReplyDelete
  3. //பச்சையம் இழந்து தளர்ந்து
    உலர்ந்து சருகாகி
    தள்ளாடி தள்ளாடி
    அயல்மண்ணுக்கு உரமாவேனோ?//

    அற்புதமான வரிகள்...

    ReplyDelete
  4. பச்சையம் இழந்து தளர்ந்து
    உலர்ந்து சருகாகி
    தள்ளாடி தள்ளாடி
    அயல்மண்ணுக்கு உரமாவேனோ?

    காலத்தின் கையில் நான்.


    ....Simply Superb!

    ReplyDelete
  5. மறு சுழற்சி ...

    ReplyDelete
  6. Annachi..Interesting..nice. Esp. the second paragraph.

    Just that this small brain is not capable of understanding completely about what is conveyed in the first paragraph in its entirety :-). Will bridge the gap.

    ReplyDelete
  7. ஆஹா ..அமர்க்களம் ...
    மனதை சுருட்டி கவர்ந்து விட்டது கவிதை

    ReplyDelete