வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, February 10, 2011

அன்பிருக்கா இல்லையா ?


ஆண்: கண்டும் காணாம
             பாசாங்கு செய்யுற

பெண்: உனை காண உன்தெருக்கு
              வந்தும்மா என்னை புரியல

ஆண்: பார்த்தும் பாக்காம
             தவிக்க வைக்கிற

பெண்: நீ இருக்கும் இடமெல்லாம்
             வந்தும்மா அறிய முடியல

ஆண்: ஓரக்கண்ணால் பார்த்து
               உயிர எடுக்குற

பெண்: கண்சாடை காட்டியும்
              அத படிக்க தெரியல

ஆண்: கவனத்த ஈர்த்து
             கவர்ந்து கொல்லுற

பெண்: நீ பாக்குறப்போ கொளந்தைய
              கொஞ்சினேன் அதுகூட புரியல

ஆண்: அன்பிருக்கா இல்லையா
             அறிய முடியல

பெண்: உங்கம்மாவ அத்தேன்னு
              கூப்பிட்டும்மா அன்பு புரியல

வேண்டுகோள்: இந்த கவிதையில் வருவது போல் பெண்கள் எப்ப அடுத்த நிலைக்கு போனார்கள் என்று பாவம் இந்த ஆண்களால் கண்டுபிடக்க முடிவதில்லை. பெண்களே தயவுசெய்து வரும் காதலர் தினத்தில் ஆவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்.

5 comments:

  1. ஆஹா..... வேண்டுகோள் வேறயா? ஹா,ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //வேண்டுகோள்: இந்த கவிதையில் வருவது போல் பெண்கள் எப்ப அடுத்த நிலைக்கு போனார்கள் என்று பாவம் இந்த ஆண்களால் கண்டுபிடக்க முடிவதில்லை. பெண்களே தயவுசெய்து வரும் காதலர் தினத்தில் ஆவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள்//

    Appadinaa pen budhi mun budhinu otthukareenga... ha ha ha...idhu super...:))))

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete