கல்வி வேண்டி
இளமை
தொலைந்தது ...
காதல் வேண்டி
சுயம்
தொலைந்தது ...
வேலை வேண்டி
கனவு
தொலைந்தது ...
பதவி வேண்டி
நட்பு
தொலைந்தது ...
இல்லறம் வேண்டி
இன்பம்
தொலைந்தது ...
கலவி வேண்டி
தூக்கம்
தொலைந்தது ...
சமுகமரியாதை வேண்டி
சுற்றம்
தொலைந்தது ...
வேண்டியதெல்லாம்
கிடைத்தது
வெறுமையில் ...
இல்லறம் வேண்டி
ReplyDeleteஇன்பம்
தொலைந்தது ...ரொம்ப தைரியம் தான் அப்பு வீட்டில் அடி வாங்க போறீங்க..உண்மை :)
கலவி வேண்டி
தூக்கம்
தொலைந்தது
உலக நடப்ப , உண்மைய சொல்ல தைரியத்த விட மனச்சாட்சி ரொம்ப முக்கியமுன்னு நினைக்கிறேன் .....
ReplyDelete