வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

வழக்கு எண் 18/9 மீள் May 11, 2012

படம் நாயகியின் பார்வையில் தொடக்கி பார்வையில் முடிகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கதாபாத்திரத்தின் வழியாக பார்ப்பது.

கதையின் நாயகி மொத்தம் பேசும் வசனங்கள்

"அதன் சொல்றேன்லே... எனக்கு யாரையும் தெரியாது"
"அம்மா மோதிரம் "
"அம்மா சர்ப் தீந்திருச்சு"
"அம்மா காப்பி வேணுமா"
"பொருக்கி "
"எனக்கு ஒரு தம்பி இருந்த பாத்துக்க மாட்டேனா"

ஆனால் அவளின் உணர்வுகளை அழகா காட்சிகளில் விளக்கியிருப்பது அழகு.

இரு கதையும் வகிடு எடுத்து அம்மா சடை பின்னியது போல் இயல்பாய் இணைவது தனி அழகு.

காலத்துக்கு தேவையானதை காலத்தே கொடுத்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் இதுவரை வந்த தமிழ் திரைப்படங்களின் முதன்மையான படம் என்பேன் .

தமிழ் திரைப்படங்களின் வழக்கு(களையும்) எண்(ணங்களையும்) புரட்டி போட்டிருக்கிறது வழக்கு எண் 18/9.

No comments:

Post a Comment