வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

சும்மா சொல்லிட்டேன்

பங்குனி பொங்க பாக்க
குடும்பத்தோட வாடான்னு
ஆத்தா ஆசையா வந்து
கூப்புட்டுச்சு.

மொதநா
சாமிகரகம் மொளப்பாரி
அடுத்தநா
மாவெளக்கு தீச்சட்டி
கடேசிநா
கெடவெட்டு சாமி கரைக்குறது
எல்லாத்தையும் ஒன்னுவிடாம
பாக்கனும் போல இருக்கு.

கூடப்படிச்ச சோட்டுக்காரபுள்ள
படும்பாடு பாக்க பொறுக்காம
வேலயிருக்குமா வல்லன்னு
சும்மா சொல்லிட்டேன்
இந்த வருசமும்.

#என்அடிச்சுவடு

#பொய்சொல்லிட்டேன்

#சும்மாசொல்லிட்டேன்

இதே கவிதையை  #பொய்சொல்லிட்டேன் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். இது வட்டார வழக்கில் #சும்மாசொல்லிட்டேன்  .

No comments:

Post a Comment