வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

பொய் சொல்லிட்டேன்

பங்குனித் திருவிழா
பார்க்க குடும்பத்தோட வாடா
அம்மா ஆசையோட
அழைத்தாள் போனில்.

முதல்நாள்
சாமிகரகம் முளைப்பாரி
அடுத்தநாள்
மாவிளக்கு தீச்சட்டி
கடைசிநாள்
கிடாய்வெட்டு சாமிகலக்கல்
எல்லாம் பார்க்க
எனக்கும் ஆசைதான்.

பள்ளிக்கூடத்தில் கூடப்படித்த
பாவிப்பயமகள் படும்பாடு
பார்க்க பிடிக்காமல்
வேலையிருக்கும்மா வரமுடியாது
பொய் சொல்லிட்டேன்
இந்த வருடமும்.

#என்அடிச்சுவடு

#பொய்சொல்லிட்டேன்

#சும்மாசொல்லிட்டேன்

No comments:

Post a Comment