வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Friday, November 25, 2016

தாய் காத்திருக்கிறேன்

காத்திருந்தேன் சிலகாலம்
கருவாகி உருவானாய்.

சூல்கொண்டு சுகம் தந்தாய்.

வழியெல்லாம் விழியாய்
விழித்திருந்தேன்.

வலிகள் மறந்தேன்
வழித்தோன்றலாய் நீ வர.

பாலகனாய் பால்வார்த்தாய்
கால்கொண்டு உலகு அளப்பாய்
காலம்கடந்து நிலைத்திருப்பாய்

செல்லும் இடமெல்லாம்
சான்றோன் என கேட்க
தாய் காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment