வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Thursday, September 29, 2016

வலிந்த கணவன்

பாத்திரங்கள் அலம்பி
அடுக்களை ஒதுங்கி
படுக்கை விரித்தாள்.
அத்தை இரும்பி அழைக்க
சுடுசுக்குதண்ணி கொடுத்தாள்.
வலிந்த கணவன்
உறவாடி பின் உறங்கினான்.
பசியில் அழும் குழந்தை
பாலூட்டி பசி அமர்த்தி
அயர்வா சிறிதே கண்மூடினாள்.
காதுக்குள் பால்க்காரன் மணிச்சத்தம்.
தலையணை துலாவி
வெளிக்கதவுசாவி எடுக்க
குறட்டை கலைய எறிந்து விழுந்தான்
முன்னிரவில் வலிந்த கணவன்.

#என்அடிச்சுவடு

No comments:

Post a Comment