வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, September 14, 2016

மனிதம்?

நீரின்றி அமையாது உலகு
உலகின்றி நீர் அமையுமா?
உயிர் வாழ நீர் வேண்டும்
நீர் வாழ உயிர் வேண்டுமா?
பயிர் வாழ நீர் வேண்டும்
நீர் வாழ உயிர் வேண்டுமா?
நீரிட்டு உயிர் வளர்த்தாய்
தீயிட்டு எதை வளர்ப்பாய்?
நீர் விட்டு நேசம் சேர்த்தாய்
உதிரம் விட்டு எது சேர்ப்பாய்?
அணை வெட்டி நீர் தேக்கினாய்
எனை வெட்டி எதை தேக்குவாய்?
அவர்கள் அடித்தார்கள்
நாங்கள் அடிக்கிறேம்...
அவர்கள் எரித்தார்கள்
நாங்கள் எரிக்கிறேம்...
என்ன ஆனது மனிதம்?
போதும் வேண்டாம் இனியும்.
வீழ்வது எதுவாயினும் இருக்கட்டும்
வாழ்வது மனிதமாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment