வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, September 14, 2016

மனிதம் மாண்டது

அவரவர் தனித்தன்மை
ஏது என்றோம்?
இனம் என்றாய்
மொழி என்றாய்
சிறிய சிறிய
கோடு போட்டாய்
ஏன் என்றோம்?
ஆள வசதி என்றாய்
கோடுகளை சேர்க்க
பெரியகோடு போட்டாய்
எதுக்கு என்றோம்?
வேற்றுமையில் ஒற்றுமை
அதுக்கு என்றாய்
நானும் அவனும் நம்பினோம்.
ஆள வந்தாய்
அரசியல் செய்தாய்
இனம்
வேறுபாடு கற்பித்தாய்
மொழி
பிரிவினை வளர்த்தாய்
கோடு
அவனவன் எல்லையாக்கினாய்
தனித்தன்மை
வேற்றுமை ஆனது
சிறிய கோடுகள்
பெரிய கோடானது
அரசியல் ஊற்றி வளர்த்தாய்
நதி பிரிந்தது
நீர் மடைமாறியது
நதி மடலானது
நஞ்சை தாரானது
அடுப்பு அணைந்தது
வயிரு எரிந்தது
மானமுள்ளவன் இறந்தான்
ரோசமுள்ளவன் எதிர்த்தான்
எதிர்த்தவனை அடித்தான்
அடிபட்டவனும் அடித்தான்
மனிதம் மாண்டது
போர் மூண்டது.

No comments:

Post a Comment