வாசகர் வட்டம்

வணக்கம். இங்கு பயணபட்டதற்கு நன்றி. உங்கள் சுவடை பதித்துவிட்டுச் செல்லவும்.

Wednesday, September 14, 2016

மழலை வரம்

வருடங்கள் சில ஓடிவிட்டன.
இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த 
விசாரிப்புகள் இப்பொழுதெல்லாம்
அம்மாவின் பிராத்தனை
நாத்தனாளின் ஏளனம்
நட்பின் தேற்றல்
சொந்தங்களின் பரிகாசம்
அக்கம்பக்கதின் பொறனி
மாமியாரின் எல்லாமுமாய்
பரிணாமித்து பல்கிபெருகி
இலக்கின்றி எய்த
குற்றவாளியே சாட்சியாக
இலக்கு நான், குற்றவாளி
கூண்டில் ஏற்றப்பட்டிருக்கிறேன்.
ஆலமரம்
ஆஸ்பத்திரி
ஜோஸியம்
பரிகாரம்
என தனியே அலைகிறேன்
மலடி சொல் கேளாமல்
மழலையை வரங்களாக வேண்டி!!!

No comments:

Post a Comment